22 ஜனவரி 2013

சீரழியும் சமுதாயம்

முகநூலில் சில தினங்களுக்கு  முன் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹிவசல்லம்) நேசர்கள் வட்டத்தில் பதிவு செய்தது...

தமிழ் சமுதாய இஸ்லாமியர்களை இன்றைய நவீன இயக்கங்கள் சீரழித்துவிட்டது… அவர்களின் அறிவை மழுங்க செய்து முந்தைய அறிஞர்களை, ஞானத்திற் சிறந்த மேதைகளை எல்லாம் எள்ளி நகையாடக்கூடிய வகையில் இவர்களின் அறிவை அழித்துவிட்டனர்.. அறிஞர்களை மதிக்காத சமுதாயம் அறிவை ஏற்காத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, ஞானிகளை, மேதைகளை வெறுப்போடு இழிந்துரைக்கின்றனர் எனறால் இவர்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் பொருள். 


அறிஞர்களை ஏற்காதவர்கள் அறியாமை இருளில் இருப்பதாக தான் அர்த்தம், அறிவெனும் ஒளியை ஏற்காது அறியாமை இருளில் சமுதாயம் இருந்தால் ஒருகாலும் உருப்படாது என்பது திண்ணம். அந்த செயற்கரிய காரியத்தை தான் திறம்பட செய்து இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை என சமூதாயத்தையே பாழுங்கிணற்றில் தள்ளி ஒரு நூற்றாண்டினையே மிக தீவிரமாக கரித்துவிட்டனர் இவர்களின் தலைவர்கள்!? இவர்களை பின்பற்றும் சமூகம் எப்படி வாழும் இனி வீழும் தான்!

அத்தகையவர்களின் அறிவீன சிந்தனைகளை நம் போன்ற நாயகநேசர்கள் மட்டுமே முறியடிக்க முடியும். வாருங்கள் ஆன்ற அறிவினை வளர்ப்போம்.. அல்லாஹ், ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) -ன் அவர்களின் தூய்மை சமுதாயம் படைப்போம். வளங்களும் நலங்களும் அப்போது மட்டுமே சூழும்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: