காயிதே மில்லத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காயிதே மில்லத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூன் 2020

பேரன்பின் விடைமொழி

 "காயிதே மில்லத்"
என்பது தனியொருவரின்
அடையாளச்சொல் அல்ல;
அது சமூகத்தின் ஒட்டுமொத்த
தேசியக் குறியீடு.


"காயிதே மில்லத்" என
காகிதத்தில் எழுதினாலும்
கண்ணியம் கமழும்!

இனி யார்?
கண்ணியத்திற்குறிய எனும்
அடைமொழிக்கு;
மனிதநேய பேரன்பின்
விடைமொழிக்கு!

முகநூல் இணைப்பு

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

06 டிசம்பர் 2014

காயிதேமில்லத் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வும் என் உணர்வும்

நண்பர் ஆளூர் ஷாநவாஸ் இயக்கிய கண்ணியத்திற்குரிய "காயிதேமில்லத்" அவர்களின் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆவணப்படத்தை அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து 04-12-2014 அன்று வெளியிட்டது. ஆவணப்படத்தை பார்த்த என்னுடைய எண்ணக்கருத்துக்களை காணொளியாக்கி இணைத்திருக்கிறேன். நண்பர்கள் குறைகள் இருந்தால் பொறுத்தருளவும்.


ஆவணப்படம் பார்த்த உணர்வில் எனது கருத்தாக ஒரு வீடியோ பதிவாக எனது எண்ணத்தை பகிர்ந்திருக்கிறேன், பதிவில் சாதாரணமாகத் தான் கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.. ஷாநவாஸ் அவர்களை நமது சமூகமும் இளைஞர்களும் ஒரு முன்னுதாரணமாக் ஏற்று செயல்பட வேண்டும் என்ற வேட்கை தான் இதற்கு காரணம். இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். முழுமையாக கேட்டுப்பாருங்கள் முதல் பத்து நிமிடம் கொஞ்சம் தொய்வாக பேசி இருக்கிறேனோ என்று நினைக்கிறேன். திடீரென நினைத்து பேசிவிட்டேன் திட்டமிட்டு பேசிய பேச்சு இது இல்லை.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

06 ஜூன் 2012

மனம்நிறை காயிதேமில்லத்!



மக்கள் நலம் மட்டுமே நாடும்
மக்கள் விரும்பிய அரசியல் ஞானியை
இந்திய துணைகண்டம் சுமந்திருந்தது,
சுமந்திருந்த காரணத்தால்
சுமை தெரியாமல்
சுகமாய் இருந்திருந்தது அவர்
சுவனம் சென்ற சனத்திலிருந்தே
தேடித்தேடித்தான் அழுத்திருந்தது
அழகிய புண்ணியத்தையும்,
உலவிய கண்ணியத்தையும்..!
ஆம்,
புவனம் தேடிடும் அப்புனிதர் தானே
கண்ணை இமைப்போல்
கவ்மை காத்த எங்கள்
கண்ணியத்தென்றல் காயிதேமில்லத்!

தலைவரென்றால் இப்படித்தான் என
தகைசால் தலைவராய்
தலையாய தலைமையின்
தன்னிகரற்ற இலக்கணமாய்
தங்கமென வாழ்ந்து சென்ற சிங்கம் தானே -நம்
தரணி கொண்டாடும் காயிதேமில்லத்!

அங்கியென ஜிப்பாசூழ் 
சங்கைமிகு சமுதாய துடிப்பு!
அழகு தாடியில் அமைந்திருந்த 
பழகுதமிழ் வனப்பு!
துருக்கி தொப்பி அணிந்திருந்த 
சன்மார்க்க சிறப்பு!
தூரத்திலும் யாரும் தூற்றமுடியா
தூய்மைவாழ்வின் சொலிப்பு!
மறைந்தும் புகழ் மகுடம் சூடி வாழும்
மாமேதை மனம்நிறை காயிதேமில்லத்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா