கீச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜூன் 2016

முகநூல் பதிவு 4-6-20112

அழுகையைப் போன்று ஓர் அற்புத நிவாரணி உண்டா..?

வழக்கொழிந்த தழிழ் சொற்கள் போலவே ஆகி வருகிறது நமது பண்பாடும்.


அற்புதங்களையும், அதிசயங்களையும் வேறெங்கும் தேட தேவையில்லை, உடலை விட பேரற்புதமும், பெரும் அதிசயமும் வேறெது!

அதிமேதாவித்தனம் (Over Smartness) ஆபத்தானது, ஒருவரின் சில வார்த்தைகள், ஒரு சில உடல் மொழிகள் போதும் அதை கண்டு கொள்ள. இப்படியானவர்களை அவர்களின் முதுகு பின்னால் உலகம் உற்சாக மடையன் என்று தான் அழைக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 மே 2016

மதிப்பெண்

ஆண் பெண்ணுக்கு பின்னால் போவது ஆணுக்கு பின்னால் பெண்போவது எல்லாம் இயற்கையின் விதி.. ஆனால் ஆண் பெண் இணைந்த ஒட்டு மொத்த சமுதாயமும் மதிப்பெண்ணுக்கு பின்னால் பொவது தான் செயற்கையாய் செய்யப்பட்ட சமுதாயச்சதி.
மதிபெண் வாங்கியவன் ஒருவேளை அப்படியே கடமாக்கி எப்படியோ மதிப்பெண் பெற்றவனாயிருக்கலாம், மதியூகமாய் சிந்திப்பவன், பரிட்சையை எல்லாம் பொருட்டாகவே எண்ணாது இவைகளைத் தாண்டி அவனது எண்ண அலைகள் எங்கோ.. எதையோ சாதிக்கும் முனைப்பில் இருக்கலாம்... ஆகவே மதிப்பெண்னால் ஒரு மாணவனை, அவனது திறமையை மதிப்பது எல்லாம் ஒரு மூடச்செயல் தான், அதைவிட மதிப்பெண் பெருமை பேசுவது படித்த அறியாமை எனத்தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் அதிக மதிப்பெண் பெறுவது என்பதும் ஒருவித திறமை அதற்காக வேண்டுமானால் பெற்றவர்களை வாழ்த்தலாம். பெறாதவர்களை துச்சமெனப்பார்ப்பது எவ்விதத்திலும் சரியான செயல் அல்ல என்பதே என் எண்ணம்.
அதிக மதிப்பெண் வாங்காத மேதை மாணவர்களை நான் "மதி" ஆணாய், "மதி" பெண்ணாய் தான் பார்க்கிறேன். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெற்றியை பள்ளிக்கூடத்திற்கு வெளியேயான வெளி தான் நிர்ணயிக்கும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

+2 தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியானது.
முகநூலில்....

19 செப்டம்பர் 2015

வெல்வோம் என்ற நம்பிக்கை

காலையில் எழுப்பிவிட்ட
அழைப்பு மணி 
அவ்வளவாக நல்லச்செய்தியை சொல்லவில்லை.
ஆயினும் பரவாயில்லை
இரவு விடிந்ததையும்
எழும்பவேண்டிய நேரம் தாண்டிவிட்டதையும்
உணர்த்தியதற்கு நன்றி சொல்லி

வெல்வோம் என்ற
வேட்கையிலும் நம்பிக்கையிலும்.

மீண்டும் போராட்டக்களத்தை நோக்கிய
வாழ்க்கைப்பாதையில்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

உதவி அண்மையில்

எதிர்பாராத நெருக்கடிகளிலும் நமக்கான உதவி அண்மித்தே இருக்க்றது. அவ்வாறான நேரங்களில் நெஞ்சம் துவளாமல் கொஞ்சம் துடிப்புடன் இருந்தாலே அதை நாம் கண்டு கொள்ளலாம். நலங்களின் பாலத்தை நாமே கட்டமைக்க முதற்கல் எடுத்து வைக்க வேண்டும்.. உலகம் உதவிகளால் சூழப்பட்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

29 நவம்பர் 2013

துபாய்!

உழைக்க இடந்தந்து
பிழைக்க வழிதந்து
கண்ணில் ஒளிதந்து
மகிழ்ச்சி களிதந்த தேசம்.

*

ஊழல் இல்லாத சூழல்

கூணல் இல்லாத அரசு

*

களவாணி அரசியல்வாதிகள் இல்லாத தேசம்
கரண்ட் கட்டுகள் இல்லாத பிரதேசம்.


*


உழைப்பாளிகள் கட்டிய இமயம்,
களைப்படையாத நிலையம்.






-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 நவம்பர் 2013

உறைந்து கிடக்கிறது !



சுற்றுச்சூழல் அனைத்தும்

சூனியம் செய்கிறது,
நற்சிந்தனைக்கு.

*


விருப்பமுடன் வளர்த்த அன்பின் கோட்டை அடியோடு சாயும்
நாவில் சறுக்கி விழும் ஒற்றைச் சொல்லால்!

*

வளர்ந்ததில் வெறுப்பே மேலிடுகிறது

குழந்தையின் குணத்தை கொலைசெய்தோம்!

*

சேகரிக்கப்பட வேண்டிய 

முத்துக்களை சிந்தியே செல்கிறது.
மழலை!

*

கூர்மையான ஆயுதங்கள் ஏதும் வேண்டாம்
வேல்விழி பார்வை ஒன்று போதும்
என்னை கொல்ல!

*

உண்மையில்

வேலையில்லாத நாட்களில் தான்
மூளை வேலை செய்கிறது.

*


இன்னும் என்ன சொல்ல!
திண்ண திண்ண திகட்டா சுவை,
வண்ணக் கண்ணம்!

*

சச்சரவுகளின் சுற்றுச்சுவர் வலிமைபெறுகிறது,
அவ்வப்போது நடக்கும் நீயா நானாவில்.

*

மறைந்து கிடக்கவில்லை எங்கோ,

உறைந்து கிடக்கிறது நம்மில்.
மகிழ்ச்சி!

*

உடையும் என்று தெரிந்தே

நொறுக்கப்படுகிறது.
இதயங்கள்!

*

வான்மதி பார்த்தால் வரும் நிம்மதி - நம்
திருமதிகளை பார்த்தால் நிர்கதியாகிவிடுகிறது.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 நவம்பர் 2013

சிறப்பான தலைவர் நேரு!



வாசித்தல் எனக்கு ஆசிய ஜோதி ஜவஹ்ர்லால் நேரு மீது மதிப்பையும், மரியாதையையும் தந்திருக்கிறது. அவர் அகில இந்திய தலைவர் என்பதையும் மீறி சர்வ தேச அளவிலும் மதிக்கத்தக்க சிறப்பான ஆளுமையாக இருந்தார். அவருக்கு பின் இந்திராவை சொல்லலாம். இவர்களுக்கு பிறது இந்தியாவிலிருந்து சர்வதேச ஆளுமையாக மதிக்கத்தக்க ஒருவரை சுட்டிக் காட்டுவது வெற்றிடமாகவே இருக்கிறது.

நேரு மிகச்சிறந்த தலைவர், பன்முகம் கொண்ட இந்திய சமூகத்தில் பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை வழி நடத்தியவர்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், படேல் போன்ற பாசிச சக்திகளை லாவகமாக கையாண்டு இந்திய துணைகண்டத்தின் பாரம்பரிய பெருமைக்கு விபரீதம் நேராமல் காத்தவர். இப்படியாக நேருவின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், ஃப்ரீடம் அட் மிட் நைட்"  என்ற இரண்டு உலகப்புகழ்பெற்ற புத்தகங்களை படிக்க பெரும் ஆவல்.

குழந்தைகளின் மீது பேராவல் கொண்ட நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக இந்தியா முழுவது கொண்டாடி களிக்கிறது.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இனிப்பு வழங்குவார்கள். குழந்தைகள் மகிழ்வார்கள்.

அனைவருக்கும் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் (குழந்தைகள் தின) வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 நவம்பர் 2013

என் கேள்விக்கென்ன பதில்..?


நாயகன் படமெல்லாம் பார்த்ததில்லை இவன், பார்த்திருக்க வேண்டுமே என்றெண்ணும் அளவுக்கு இவனுக்கு வயதும் இல்லை.

ஆனாலும் சில கூட்டங்களுக்கு அழைத்து செல்கையில் மேடையில் யார் தோன்றினாலும் என்னைப் பார்த்து கேட்பான் " இவர் நல்லவரா..? கெட்டவரா..?

யார் அழைபேசியில் அழைத்தாலும் என்னைப் நோக்கி கேட்பான் "நீ இப்போது பேசியவர் நல்லவரா..? கெட்டவரா..?

முகநூல் பார்த்தால் பக்கத்தில் அமர்ந்து கொண்டு முகங்களை சுட்டி என்னை விழித்துக் கேட்பான் " இவர் நல்லவரா..? கெட்டவரா..?

இவர் நல்லவரென்றாலும், கெட்டவரென்றாலும் விடாது ஏன்? எப்படி? என்றெல்லாம் வினவி எளிதில் சமாதானமாக மாட்டான் என் மகன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07 நவம்பர் 2013

அமீரகத்தில் அருள் மழை!

அமீரகத்தில் அருள் மழைப் போல பனிமழைப் பெய்கிறது.

மாலை ஐந்துரை மணி நெருங்கும் வேலையிலெல்லாம் முழுவதும் இருட்டிட எல்லா முஸ்தீபுகளையும் எடுத்திருந்தது வானம். நேற்று முன் தினம் அடித்த மணல் காற்று பனி ஆரம்பிக்க போகிறது என்ற சூழல் மாற்றத்திற்கான அறிகுறி. அதன் விடையாக இன்று பனி மாலை வேலையிலேயே கடைபோட ஆரம்பித்துவிட்டதை துபாய் பைபாஸ் சாலையின் இருமருங்கிலும் கண்ணுக்கு எட்டும் இருக்கும் பாலைவெளி தெளிவாக தெரியாதவாறு பனிப்படலம் அலசலாக திரை அமைத்து அற்புத சூழலை உண்டாக்கி வைத்திருந்தது, அதுவும் வாரக் கடைசி மனநிலை கூடுதல் குதூகளம் தந்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

31 அக்டோபர் 2013

இந்தியாவை பெருமிதப்படுத்திய இதயம்!

" இந்தியாவிலிருந்து ஏகத்துவத்தின் ஞானத்தென்றல் வீசுவதை உணர்கிறேன்"

தன் மேலங்கியை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக தளர்த்தி "அறிவின் தாயகம்"  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) மேற்கண்ட வாசகங்களை சொன்னார்கள்.

திருமூலரும், அகத்தியரும், திருவள்ளுவரும் விதைத்த ஏகத்துவ ஆன்மீகக் கருத்து ஆன்மீக பேரொளியாய் திகழ்ந்த நபிகள் நாயகத்திற்கு தெரிந்ததனால் தான் இக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இத்தத்துவம் அன்றிலிருந்தே அறியப்பட்டதனால் தான் இந்திய பூமி இஸ்லாத்தை விருப்பமுடன் உள்வாங்கிக் கொண்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சிக்காத சிறு புள்ளி!

மிகப்பெரிய சண்டையின் அந்தியில், 
ஆதிப்புள்ளியாய்  மீந்திருக்கும் 
கண்ணுக்கே சிக்காத சிறு புள்ளி!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா