மனநிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனநிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆகஸ்ட் 2014

ஈராக்கில் அட்டூழிய அரங்கேற்றம்

ஈராக்கில் மனிதாபிமானமே இல்லாமல் சிறுபான்மை மக்களான எஜீதிகள், கிருத்துவர்கள்,குர்துக்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் போன்ற இனத்தவர்களை ஈவிரக்கமே இல்லாமல் கொன்றும், புதைத்தும், விற்றும் இன்னபிற அநீதங்களையும் செய்யும் கொடிய குழுவினரை எனதளவில் வன்மையாக கண்டிக்கிறேன். 

இச்செயல் இஸ்லாத்திற்கும், நபிகள் நாயகத்தின் இனிய செயல் பாட்டிற்கும் முற்றும் எதிரானது மக்காவை வெற்றி பெற்று தாங்கள் ஆற்றிய இறுதி உரையிலும், பலமுறை தனது தோழர்கள் மத்தியிலும் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது சிறுபான்மையினர் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களது உரிமை, உடமை, உயிர் போன்றவற்றிற்கு முழுமுதலாக பொறுப்பேற்று பேணி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எண்ணத்தில் கூட தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று எண்ணிவிடக்கூடது என்று பல முறை அறிவுருத்திச் சென்றிருக்கிறார்கள். இது தான் இஸ்லாம். நபிகள் நாயகம் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அவரக்ள் கூறிய இதன் சாரத்தை அவர்களின் இறுதி உரை என்று பதியப்பெற்றிருக்கும் எந்த மொழி அல்லது எந்த வருட, எந்த நாட்டு நபிமொழிப் பதிப்பிலும் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்கு சேவை செய்வதாக கூறி இஸ்லாத்திற்கு எதிராக.. மனிதாபிமானமே இல்லாமல் மனித உயிர்களை கொன்று குவிக்கு யாராக இருந்தாலும், எந்த குழுவாக இருந்தாலும் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவரக்ள். அவர்களுக்கும் நபிகளாரின் வழிகாட்டலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களை இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக யாரும் தொடர்பு படுத்த வேண்டாம். சில இந்து நண்பர்கள் அவர்களையும் இஸ்த்தினையும் தொடர்பு படுத்தி குழப்பிக்கொள்கின்றனர், இஸ்லாமிய பெயரில்.. இஸ்லாத்திற்காக என்று அவர்கள் செய்வது ஆண்டவனுக்கே அடுக்காது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈராக் கொடுஞ்செயல்கள் - கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு - பின்னூட்ட புரிதல்

முகநூல் நண்பர் Bala Cartoonist Bala அவர்கள் நேற்றுமுன் தினம் ஈராக்கில் பாதிக்கப்பட்ட ஒரு யஜீதி இனப்பெண் அங்குள்ள பாராளுமன்றத்தில் அவ்வினத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அழுது முறையிடும் கொடுமையான ஒரு யூடியூப் லின்க் கொடுத்திருந்தார். (மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அக்குழுவின் மிக மோசமான கொடுஞ்செயல்கள் கண்டனத்திற்கு உரியது) இது போன்ற சென்சிடிவான வியங்களை அவர் எப்போதெல்லாம் பகிர்கிறாரோ அப்போதெல்லாம் பாசிச சிந்தனையாளர்களும், விசமிகள்லும், விளங்காதவர்களும் இது தான் தங்களுக்குள்ள மேடையெனக் கருதி.. ஒரு குஜராத் கலவரத்தை.. ஒரு முசாபர்பூர் கலவரத்தை நடத்தி..ப்போயிருப்பார்கள் அதாவது அந்த அளவிற்கு ஒரு புரியாமல் ரண கலமாக போயிருக்கும். அதில் பரிவாரங்களின் பிரதிநிதிகள் வேறு வந்து இஸ்லாத்தினை அவர்கள் எப்படி காண்பிக்க வேண்டுமோ அப்படி மிக மோசமாக காண்பித்து போயிருப்பார்கள். இது போன்ற பதிவுகளின் பின்னூட்டங்களை நான் பார்பது இல்லை, பார்த்தால் மனம் நோகும்.. தேவையில்லாத சிந்தனைகள் வரும்..என போய்விடுவேன்.. ஏனோ நான் பார்த்து அதில் இரண்டு மூன்று கருத்துகள் பதித்தேன் அது உங்கள் பார்வைக்கு....

*************

உலகத்தில் எத்தனையோ ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனையோ போராளி குழுக்கள் இருக்கிறது அதுவெல்லாம் அவர்கள் சார்ந்திருக்கிற மதம் சொல்கிற வகையில் தான் இருக்கிறார்கள் என்று நாம் எண்ண முடியுமா.. யாரோ ஒரு குழு செய்கிறது என்பதனால் அதை இஸ்லாம் அப்படித்தான் கூறியுள்ளது என்பதாக சொல்வதெல்லாம் அபத்தமும், அறிவீனமும். அப்படியானால் இந்தியாவில் பரிவாரங்கள் நடத்திய கலவரஙக்ளை இந்து சமயம் இப்படித்தான் செய்யச்சொன்னது என்றும், இலங்கையில் நடந்ததை பவுத்தம் சொன்னபிரகாரம் தான் செய்தார்கள் என்றும் சொல்லல் தகுமா.. சிந்திப்பீர்.

விரிவாக சிந்தித்து மனிதம் வளர்ப்போம்.

****************

திருக்குரானின் வசனத்தை போட்டு இதை தான் இஸ்லாம் சொல்கிறது என்று காட்டுவதில் எத்தனை மகிழ்ச்சி உங்களுக்கு, திருக்குர் ஆனின் வசனங்களை அதன் முன்.. பின்.. ஏதும் தெரியாமல் ஒரு பகுதியை போட்டு நீங்கள் போட பலரும் அதை பார்த்து பாருங்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என சொல்லிவிட்டு வெறுப்பை உமிழலாம் ஆனால் திருக்குர் ஆன் என்பது 23 வருடங்கள் நபிகள் நாயகத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அது சார்ந்து வெளியானது.. விமர்சிக்கும் உங்களில் யாரேனும் நல்ல சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றை படித்தவர்கள் உண்டா.. இல்லை அறிஞர்கள் சொல்ல அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்தவர்கள் உண்டா..பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எல்லாம் இவற்றை கற்காமல் ஆராயாமல் தான் இஸ்லாத்தை ஏற்றி போற்றீனார்களா.. சிந்தியுங்கள்.. மக்களை ஒருங்கிணைப்பதில்.. எல்லா சமூகத்தையும் அரவணைப்பதில்.. ஒரு மனிதன் நெறி தவறி இருக்கிறான் என்றால் அவனை நெறிபடுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் பெரும்பாலான இஸ்லாமியர்களே திருக்குர் ஆனை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரியாமல் பலரும் பலபிரிவாக இருந்து பேதங்கள் கொண்டலைகிறார்கள்.. (ஏனெனில் அவர்கள் தற்போது உருவாகி இருக்கும் நவீன இயக்கங்கள்.. குறுகிய சிந்தனையாளர்களீன் சிந்தனைக்கு தங்களை சிறைபடுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்) அப்படி இருக்க நீங்கள் எப்படி புரிகிறீர்கள். திருக்குர் ஆனை புரிவதற்கு அதன் பின்புலம் தெரிய வேண்டும், எந்த சம்பவத்திற்காக இது வெளியானது என்ற விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.. இதெற்கெல்லாம் உலகம் முழுவதும் உள்ள நிறைய அறிஞர்கள் தப்ஸீர் என்ற விளக்க உரைகளை எழுதி இருக்கிறார்கள் இத்தனையும் இருக்கிறது.

நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் அன்பால் இணைந்து உல்கம் ஆள்வோம். வாழ்வது கொஞ்சநாள் அன்பை விதைத்து செல்வோம்.

எப்போதும் Bala Cartoonist Bala இது போன்ற பதிவு போடும் போது இப்படியே வன்மம் கக்குவது வாடிக்கையாகிவிட்டது. நாம் மனிதர்கள்..

தீயவர்கள் தீயவர்களின் செயலை உதாரணமாக ஏற்கவேண்டாம்.. அதை அவர்களை அம்மதத்தின் பிரதிநிதிகளாக்க வேண்டாம். அவர்கள் கழிசடைகள்.

****************

மனித இனத்திற்கு எதிரான செயல்களை எந்த மதத்தவன் செய்தாலும் எதன் பெயரில் செய்தாலும் தவறு தவறு தான்.. அவர்களை மனிதத் தன்மை கொண்ட எவரும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த இதயமில்லாதவர்களை எந்த மதத்தின் பிரதிநிதிகள் என்றும் சொல்லாதீர்கள். அவர்கள் வேண்டுமானால் அவ்வாறு தம்பட்டம் அடிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல இதயம் உள்ளோர் சிந்திப்பீர்.

*********************


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஜூலை 2014

நன்னாட்கள்!

வாழ்வில் ஆகியிருந்த 
சுபதினங்கள் சிறப்பான கணங்கள் 
எல்லாம் எப்போதும்
சுகமானதாய் மட்டுமே கடப்பதில்லை,
அந்நாளின் மனநிலைகளாலும்
சூழ்நிலைகளாலுமே முடிவாகிறது
அவற்றின் சுக..துக்க.. அளவீடுகள்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 அக்டோபர் 2013

கனவு மொழிகள்!

எனக்கு உருது, அரபி மொழிகளில் எழுத படிக்கவும், நம் அணடை மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றறைவ்களையும் ஓரளவாவதும் கற்க வேண்டும் என்பது மன வேட்கை!

ஆனாலும் எத்தனையோ மலையாளிகளிடம் இதுகாரும் பழகி என்ன பயன் அவர்களது அட்சரத்தில் அ, ஆ கூட கற்கவில்லை. 

பெங்களூருவில் உருது முஸ்லீம்களிடத்திலும், துபாயில் ரூம் மேட் பாக்கிஸ்தானியுடனும் பழகியும் என்ன அதுவும் பாழ்! ஒரு அலிப், பே கூட பே! 

கன்னடத்தில் மாத்தாட மனதெல்லாம் ஆசை ஆனாலும் அவ்வப்போது அந்நாளில்  இரவு நேர கன்னட செய்தி கூட‌ தூர் தர்சனில் கேட்போன் அத்தோடு முடிந்தது. அதுவும் சுத்தப்பட்டு வரவில்லை! 

டீ பாயிலிருந்து அலுவலக நண்பர்கள் வரை தெலுங்கர்கள் இருந்தென்ன ஒழுங்காக ஒரு எழுத்துக்கு வழியில்லை!

அரபு நாட்டில் இருந்தும் சின்னஞ்சிறு வயதில் மதரஸாவில் ஓதியதன் பொருட்டு படிக்க முடிந்திருக்கும் அரபி எழுத்துக்களோடு சரி, சரள அரபியும் மாஃபி! 

தொழில் ரீதியாக வந்த நிர்பந்தத்தின் காரணமாக ஏதோ ஆங்கிலம் தெரிந்து தப்பிக்கிறோம். 

தாய்மொழி அவசியம் மூச்சை போன்றது. அத்தோடு பிறமொழி அறிவென்பது கூடுதல் கண்களும், காதுகளும் பெற்றது  போன்றது.

நேற்று எனது நண்பர் மலையாள புத்தகத்தை மொழி பெயர்க்கிறேன் என்றவுடன் நான் நம்பவில்லை அவரை படிச்சச்சொல்லி அதை பரிசோதித்தபின்பே நம்பினேன். அது தொடர்பாக எழுந்த சிந்தனையில் மேற்பட்டவை எனக்குள் குடைந்தெடுத்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா