கவிதை - சோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - சோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 அக்டோபர் 2018

நான் நினைதது

நான் நினைத்தேன் நீ விரும்புவாயென..
நான் நினைத்தேன் நீ ரசிப்பாய் என
நான் நினைத்தேன் குறை எங்கேயென தேடாதிருப்பாய் என
நான் நினைத்தேன் அன்புமிகுந்திருக்குமென
நான் நினைத்தேன் ஆவலோடு பார்ப்பாயென
நான் நினைத்தேன் கர்பனைகள் விரியுமென
நான் நினைத்தேன் பழைய நினைவுகள் மீட்டப்படும் என
நான் நினைத்தேன் பார்த்து அதனோடு பேசிக்கொள்வாயென
நான் நினைத்தேன் நீ என் தவப்பயனென மார்போடு அழுத்திக்கொள்வாயென
நான் நினைக்கவில்லை இத்தனையும் நடக்காதென
எதார்த்தம் ஏற்றுக்கொள்ள சிரமயாய் தான் இருக்கும்
பரவாயில்லை அவ்வப்போது எடுக்கும் என் புகைப்படத்தை
இனிமேல்  புலனத்தில் உனக்கு அனுப்பமாட்டேன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07-10-2018

19 மார்ச் 2016

அகல் விளக்கு


அழகிய மாடத்தில்
ஏற்றப்பட்ட அகல் விளக்கு
அற்புதமாய் எரிந்திருந்தது...

திடீரென வந்த கொடுங்காற்று
தீபத்தை திருடிச்செல்ல
இருள் கொடுத்து
துக்கம் நிரப்பியது.

மாடத்தை ரசித்து நின்றவர்கள்
கொஞ்சநேரக் கைசேதத்திற்குப்பின்
சகஜமெய்தினர் எப்போதும் போல...

மாடத்தை அலங்கரித்தவன்
அகல் விளக்கில் தீபமேற்றி
அதனொளியில் கிரங்கிக்கிடந்தவன்,
கலங்கித்தவிக்கிறான் இப்போது
கண்ணொளியேபோனது போல்.

கடைத்தேற்ற யாருமின்றி
கண்ணீர் கைகுட்டையாகி
துக்கத்தை தோழமைக்கழைத்து
துவண்டுழல்கிறான்.

எல்லோருக்கும்...
அணைந்தென்னவோ
அகல் விளக்குத்தான்,

விளக்கேற்றியவனுக்கோ
விடியாமலேயே போனது...

பறிபோனது
கண்ணொளியன்றோ!


முஹையத்தீன் பாட்ஷா