23 பிப்ரவரி 2026

மழை

மனிதனின்பால் 
பொழியும்
இறைவனின் அருட்பால்.
*
சூல் கொண்ட காற்றுக்கு பிறந்த
கால் கொண்ட மேகக்குழந்தைகள்.
*
பூலோக வனத்தின் 
அன்னைக்கரங்கள் 
"கண்ணே வா" என்றழைக்க 
தாவி வரும் தண்ணீர் குழந்தைகள்.
*
வெளியே தெரியாத 
வேர்களின் வேண்டுதல்களை ஏற்ற 
வானத் தாயின் அமுதம்.
*
தண்ணீர் வடிவில் 
தனிப் பெருங் கருணை.
*
பூமி உயிர்க்க வரும் சாமி.
*
ஜா.மு.
21-02-2026



கருத்துகள் இல்லை: