மனிதனின்பால்
பொழியும்
இறைவனின் அருட்பால்.
*
சூல் கொண்ட காற்றுக்கு பிறந்த
கால் கொண்ட மேகக்குழந்தைகள்.
*
பூலோக வனத்தின்
அன்னைக்கரங்கள்
"கண்ணே வா" என்றழைக்க
தாவி வரும் தண்ணீர் குழந்தைகள்.
*
வெளியே தெரியாத
வேர்களின் வேண்டுதல்களை ஏற்ற
வானத் தாயின் அமுதம்.
*
தண்ணீர் வடிவில்
தனிப் பெருங் கருணை.
*
பூமி உயிர்க்க வரும் சாமி.
*
ஜா.மு.
21-02-2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக