05 ஏப்ரல் 2016

ச்சீய்.. நாயே

"சும்மா தானே செல்கிறேன் நான்..
ஏன் கல்லெடுத்து அடிக்கிறாய்..?"
குரைத்துச் சொல்கிறது
தெருவோரம் செல்லும்
அடிபட்ட நாய்.
"அடச்சீய்... மனிதா!'
என்பது தான்
நாய்களுக்கிடையேயான
கோபதாபச் சொல்வழக்காம்.
'ச்சீய்.. நாயே' என்கிறாய்..
சக மனிதனைப் பார்த்து நீ..,
கேவலம் மனிதர்களென
கூடிச்சிரிக்கிறது நாய்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: