மீலாது நபி நாள் பாடல் -2026
எடுப்பு:
வல்லோன் அல்லா தந்த நூருல்லா - அவரின்
நூரில்லாமல் ஏது வானம் பூமியில்
வல்லோன் அல்லா தந்த நூருல்லா
முடிப்பு:
1
ஆதியின் ஜோதியாய் நின்றவராம் - அவன்
அர்ஷிலும் ஜோதியாய் நிலைத்தவராம்
தூதர்கள் ஓதிய பூபாளம் அவர்
பூவிது சூடிடும் பூவாரம்
பூரிக்கும் தேனாரம்
2
அப்துல்லா நெற்றித் திலகமவர்
அன்னை ஆமினார் வயிற்றின் பவளமவர்
குரைஷிகள் குலத்தின் கீரீடமவர்
குவலயமதற்கே விளக்குமவர்
ஹுப்பின் இலக்குமவர்
3
கோமானின் திருமுன் கசிந்துருகி ஆங்கே
ஹஸ்ஸானும் கஃபும் கவி செய்தார்
பூசரி புர்தா தனை யாத்தார்
புர்யீ உருகி தனை இழந்தார்
உயிரே முஹம்மதரே.
அருள்வீர் முஹம்மதரே
13-08-2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக