18 பிப்ரவரி 2014

தப்பித்த மூன்று உயிர்களும், தப்பாத முந்தைய உயிர்களும்



மகனை  மரணத்திலிருந்து காப்பாற்ற ஓர் தாயாக  சந்தித்த அதிக பட்ச துன்பம், மனவேதனை, நம்பிக்கை துரோகம் இவைகள் எல்லாம் அற்புதம் அம்மாள் அவர்கள் தனது அசாத்தியமான நம்பிக்கையால், முன்னெடுப்பால் வென்று காட்டியிருக்கிறார்கள். என்ன நேர்ந்தாலும் நிலைகுலையக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அதுவும் ஒரு பெண் சமூகத்தில் எப்படி மனத்துணிவு கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டய் விளங்குபவர் அற்புதம் அம்மாள்.


இவர் தனது மகன் பேரறிவாளனுக்கு இன்று கிடைத்த தீர்ப்பாம்"விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு" என்ற செய்தி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சை வரவழைத்திருக்கலாம். ஆனாலும் பேரறிவாளனும் மற்ற மூவரும் நிரந்தரமாக வெளியாகும் நாள் தான் நீதியின் வெற்றியாக நாம் கொண்டாடப்பட வேண்டிய நாள்.

இன்று இம்மூவருக்கும் கருணை மனு காலம் கடந்து நிராகரிக்கப்பட்டதை வைத்து வந்திருக்கும் தீர்ப்பால் நிரபராதிகள் தூக்கு கயிறுகளிலிருது காப்பு பெற்றிருக்கின்றனர். ஆனால் நீதிமன்றமே ஒப்புக்கொண்டபடி குற்றம் நிரூபிக்கவேப்படாமலும்  அப்சல் குருக்கு தூக்கு தண்டனை கொடுத்து ஒரு குற்றமற்ற இந்தியனை, காஷ்மீரி குடும்ப அப்பாவியை இந்திய திருநாடு கழுவேற்றி கொன்று அவரது குடும்பத்தை நிர்கதியாக்கியது குறிப்பாக ஒரு சமூகத்தை குறிவைத்து இழைக்கப்படும் கொடுமைகளின் தொடர்கதையேயன்றி வெறில்லை.


அதிஷ்டவசமாய் இன்று மூவரும் உயிர் பிழைத்தனர், ஆனால் ஆதாரமே இல்லாமல் எத்தனை பேர்  அதிலும் வஞ்சிக்கப்படும் சமூகத்தின் நிரபராதிகளின் உயிர் இழந்திருக்கிறது.

என்ன செய்ய நெஞ்சம் இதையெல்லாம் நினைக்கவே செய்கிறது!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: