18 ஆகஸ்ட் 2013

துணையுடன் துயிலும் இரவெப்போது???



தனியாய் துயிலுகிறேன்
துணையுடன் துயிலும் இரவெப்போது???

கற்பனை கற்கோட்டைகளெல்லாம்
வேதனை வெந்நீரூற்றில் வெந்ததுவே!

உள்ளிருக்கும் உஷ்ணங்கெளெல்லாம் தணிய
ஊற்றுக்குளிர் நீர் போல்
ஏற்றமிக்க துணை எனக்கும் அமையுமோ(?) வென...
காத்துக்கிடக்கும் இக்கன்னிகைக்கு
கன்னத்தில் முத்தக்கறை படியும் நாள் என்றோ???

வருங்கால கணவனின் கனவோடு
அரும்பிய உறக்கத்தில் ஆழ்ந்த நேரம்...
அள்ளி அணைத்தேன் தலையணையை
"தலைவனென்றெண்ணியே" !!!

இந்த பிரம்மைகளுக்கெல்லாம்
பிரம்படி எப்போது???

எங்கோ இருக்கும் என் தலைவா!!!
உனக்காக உரமிட்டு உடல் வளர்த்தேன்,
உன் கண்கள் பார்த்தே - இந்த
காதல் மலர் வெடிக்கப்போகும் நாள் எது??? என்ற ஏக்கத்தில்
எத்தனை முதிர்ந்து அதிர்ந்து போன கன்னிகைகள்!!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு: எழுதியது 1996 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி... "இரவுகள்"  என நான் எழுதிய தொடர்கவிதை தொகுப்பிலிருந்து