30 மே 2016

விடைபெறுதலின் சலனம்..!

காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து 
சொல்லும் வார்த்தைகளும்,
செய்யும் பாவனை முயற்சிகளும்
காட்டி கொடுத்து விடுகிறது உன்னை!

நீ பொத்தி வைத்த பொக்கிசங்கள்
ச்சீ… என்று எள்ளி நகையாடுகிறது

உன் வார்த்தைகளின் ஏக்க கூர்மைகள்
என்னை கொல்லாமல் கொல்கிறது

உன் விழியின் சோகம்
என்னை அம்பெடுத்து தைக்கிறது

நீ சிரிக்கும் சிரிப்பின் ஓரத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும் உன் இதய சோகம்
என்னை ஏளனம் செய்வதால்
நான் கண்டும் காணமல் இருக்கிறேன்.

சட்டென சோகம் சூழ்ந்தால் 
பட்டென அழத்தெரியும் உனக்கு, 


கொட்டும் அழுகை வந்தாலும்
கெட்டியாய் சிரிக்கத் தெரியும் எனக்கு!

என்ன  சொல்லவதடி ...
இப்படியும் தான் வாழ்கிறொமே..!?


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 -may- 2012
இதே நாளில்…

முகநூல் நிலைத்தகவல் 30-05-2012

அவரவரின் செய்ல்பாடுகள் அவரவரின் பழகிப்போனநெஞ்சுக்கு நீதியாக தெரிகிறதே ஒழிய உள்நெஞ்சத்தின் நீதி அறையை அவரகள் தட்டாமலேயே தீர்ப்பில் சமாதானம் ஆகி, தான் பிழைக்கு அப்பாற்பட்ட தூயவன் என மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க அவரவர் நெஞ்ச நீதி!

J Mohaideen Batcha
ஆயிரந்தான் காசு பணம் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு சமூக அந்தஸ்து கிடைத்து விடுவதில்லை ஆனால் அந்த சமூகத்தின் போலி அந்தஸ்திற்காக இவர்கள் எதையும் அந்த காசு பணத்தால் செய்ய சித்தமாக இருக்கிறார்கள்.

பணம்.. பணம்... பணம்... என்று தான் எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். ஓடும் ஓட்டத்தில் சமூகம் குறித்து கூட வேண்டாம் தன் குடும்பத்தினரான சொந்த பந்தங்கள் குறித்து கூட வேண்டாம், அக்கம் பக்கங்கள் குறித்து கூட வேண்ட அட அவன் தன்னையாவது குறித்து சட்டை செய்து இன்றை நிமிடம் வாழ்கிறானா என்றால்.... கேள்விக்குறி தான்.. ஏன்றோ ஒரு நாளையை குறித்து அதற்காக சேமிக்கிறேன் என்று இன்றை, இந்த நொடியை எல்லாவற்றையும் இழக்கிறான், நட்புக்கள் எல்லாம் உப்பில்லாமல் போய்விட்டது இப்போது, உறவில் எல்லாம் இவனுக்கு நெருக்கம் குறைந்து போய் விட்டது இவன் சிந்தனை யாவிலும் ஒன்று தான் பணம்.... பணம்...பணம்...ஓடு.. ஓடு.. பிறகு சாவு!



ஞான சூரியர்கள் எப்போதும் சிலராகத் தான் இருப்பார்கள் ஞான சூனியங்கள் தான் அதிகமாக இருக்கும். பிரச்சனை உண்மையான ஞான சூரியர்களிடமிருந்தும், உண்மையான ஞான சூனியத்திடமிருந்தும் அதிகம் வராது.. சூனியமாக இருந்து கொண்டு சூரியனாய் நினைக்கிறார்களே அவர்கள் தான், அவரகளே தான் எல்லா பிரச்சனையும்.
என்ன செய்ய எல்லோருடனும் வாழத்தான் வேண்டும் சூனிமாகவே.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

25 மே 2016

எதிரியை வீழ்த்திய குதூகலம் பிஜே - அன்சாரி சந்திப்பு


எல்லாம் அரசியல்.. எங்கும் அரசியல் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான், பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு மஜக அன்சாரி பிஜே-வை அவர் அலுவலகத்தில் சந்தித்தார், நடப்பு அரசியலைப்பற்றி பேசிக்கொண்டனர் என்று பதிவுகளாக பார்க்கிறோம் இதை பார்த்த ததஜவினர் இனி உலகமே அமைதிப்பூங்காவாகிவிடும், அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்தது ஓர் வரலாற்று அற்புதம், இந்தியாவில் மோடி அரசின் இஸ்லாமிய துவேசப்போக்கு முடிவுக்கு வந்துவிடும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு இஸ்லாமிய பிரஜைக்கும் கோலார் தங்கச்சுரங்கத்திலிருது கிலோ கணக்கில் வெட்டிக்கொடுப்பார்கள் எனும் ரேன்ஜுக்கு ஆஹா… ஓஹோவென ததஜ.த்தினரும், மஜகவினரும் பாராட்டி பதிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த சந்திப்பு… இது பொதுநலன் சார்ந்ததா இல்லை சுயநல கொண்டாட்டமா என்றால்… வெரி சிம்பிள், அன்சாரி பேர.ஜவாஹிருல்லாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர் கட்சியை, அலுவலகத்தை மீட்க கோர்ட்டுக்கு போய் ஏமாந்தார் பிறகு தானே கட்சி ஆரம்பித்து ஜவாஹிருல்லாவை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று தீராபகை உணர்வோடு காத்திருந்தார், இதில் பிஜேவும் ஒரு காலத்தில் அவரது செயல்பாடும், வஞ்சக உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் பிடிக்காமல் ஒரே கொள்கை கொண்டிருந்தாலும் தமுமுகவால், பேரா.ஜவாஹிருல்லாவால் ஓரங்கட்டப்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால் பிஜேவும், அவரது இயக்ககுஞ்சுகளும் பேரா.ஜவாஹிருல்லாவை தமுமுகவை சதிசெய்து வீழ்த்த வஞ்சினம் கொண்டு அலைந்து கொண்டிருந்தனர். அது சாத்தியமானதால் இந்த தித்திப்பு சந்திப்பு அவ்வளவு தான்.



ஏனென்றால் நடந்துமுடிந்த தேர்தல் காட்சிகளில், சென்றமுறை சட்டமன்றத்தில் முதலில் ஜெ.வுக்கு புகழமாலை பொழிந்த பேரா.ஜவாஹிருல்லா நிலைப்பாடு மாறி எதிர்துருவமாக மாறியதால் ஜெயாவும் ஜவாஹிருல்லாவை வீழ்த்ததும் மனப்பான்மை கொண்டிருந்தார் சில கணக்குகளின் பிரகாரம் இந்நிலையிலும் பேரா.ஜவாஹிருல்லா கூட்டணிக்காக ஜெயாவை நாட அவருக்கு கார்டனின் கதவு திறக்காததால் பேரா.ஜவாஹிருல்லா திமுகவில் ஐக்கியமானார்.


அப்போது தான் கட்சி ஆரம்பித்த அன்சாரிக்கு எப்படியாவது தேர்தலில் நின்று ஜெயித்து பேரா.ஜவாஹிருல்லாவுக்கு வயிற்றெறிச்சலை உண்டாக்க வேண்டும் என்பதே லட்சியம் அதனால் எதிர் எண்ணம் கொண்டிருந்தாலும் ஜெயாவின் வீட்டு வாசலை தட்டினார் மஜகவை தூக்கிப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு சிறு தேவையும் இல்லாத ஜெயாவிடம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல முஸ்லிம் இயக்க ஆதரவு, பேரா.ஜாவஹிருல்லாவை வீழ்த்துதல்  என்ற அவரின் எண்ணத்திற்கும் எலி சிக்கியது. இரண்டு சீட் கொடுத்தார். ஒன்றில் ஜெயித்தார் அன்சாரி. ஜெவுக்கும் சந்தோசம்.

 எதிர்தரப்பிலோ பேரா.ஜவாஹிருல்லா உட்பட திமுக கூட்டணியில் இருந்த மமக ஒட்டுமொத்தமாக காலி,  அன்சாரி ஜெயித்த சந்தோசத்தைவிட மமக கூடாரம் காலி என்ற சந்தோசமே மஜகவின் அன்சாரியையும், மமக எதிர்ப்பாளர்களையும், குறிப்பாக பிஜே மற்றும் அவரின்ததஜ.த்தினரையும் கொண்டாடி திளைக்க வைத்தது. அதை இப்போது வரை முகநூலில் பகிர்வாக பார்க்கிறோம்.

ஆக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதையும், வீழ்ந்தவுடன் ஆகா அவன் வீழ்ந்துவிட்டான் என மகிழ்ச்சி ஆரவாரமிடுவதையும் தவிர பெரிய சமூதாய நோக்கங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த ஒரு முனையில் அன்சாரியும், பிஜேவும் ஒன்றிணைந்ததால் இருவருக்கும் பொது எதிரியான பேரா.ஜவாஹிருல்லா வீழ்ந்தததால் தங்கள் வெஞ்சினம் வென்றதை ஒருவருக்கொருவர் சந்தித்து சாதித்துவிட்டோம் என மகிழ்கிறார்களே தவிர வானத்திற்கும், பூமிக்குமாக மாற்றங்கள் தோன்றிவிட்டதாக வேயப்படும் இட்டுக்கட்டுகள் போல சமுதாய நலனுக்கெல்லாம் கடுகளவும் அதில் இடமில்லை என்பதை  தொடர்ந்து பதிவிடும் இயக்கபோதையில் சிகாமணிகள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என வெளியே அறிவித்துவிட்டு எதிரி பேரா.ஜவாஹிருல்லா சார்ந்திருப்பதாலும், மார்க்கவிசயத்தில் பாரம்பரிய வழியை பின்பற்றும் முஸ்லிம் லீக் இருப்பதாலும் இவர்களை வீழ்த்துவதே தன் தலையாய கடமை என இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு அற்பணிப்புடனும் உள்ரங்க வேலைபார்த்தனர் இந்த போலி தவ்ஹீத்வாதிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தேர்தல் முடிவு வெளியானதும் மமகவினர் தோற்றதை, முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தோற்றதை ஏதோ உலத்தில் கிடைக்கப்பெறாத ஒன்று தங்களுக்கு கிடைத்ததைப் போல ஆனந்தப்பட்டு ததஜக்கிவினர் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து முகநூலில் ஷேர் செய்தது முதல் இனிப்பு வழங்கி கொண்டாடியதை சமூக அக்கரையுள்ள யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

 வெறும் தங்கள் இயக்க அரசியல் சண்டைகளால் இந்த சமூகம் அரசியல் ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை, இந்த சமூகம் வீழ்ந்தாலும் பரவாயில்லை சட்டமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை  தங்களின் இயக்க எதிரி வீழவேண்டும் என்ற பொறாமை குணம் கொண்டு சமூக அழிவிற்கு அரசியல் ரீதியாகவும் ததஜ வழிவகுக்த்திருக்கிறது என்பதே இருவரின் சந்திப்பிலும், சென்ற தேர்தல் தொடர்பான நடைமுறையிலும் இந்த சமூகம் அறிய வேண்டிய உண்மைகள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 மே 2016

2016 சட்டமன்ற தேர்தல் - திமுக தோல்விக்கான பத்து காரணங்கள்....


1.சென்றமுறை போலவே இம்முறையும் ஏதிரியை வீழ்த்த சரியான திட்டமிடல் இல்லை

2.கூட்டணி சேர்ப்பதில் காட்டிய அலட்சியம் மிகமுக்கிய காரணம் அதிலும் இருந்த திருமாவை விட்டிருக்ககூடாதுபேரத்தில் பணிய மறுத்த விசயகாந்தையும் வைத்திருந்திருக்க வேண்டும் ஏனென்னால் ஜெதிமுகவை வீழ்த்த அது ஆளுங்கட்சியாக இருந்த 1991 மற்றும் 2001 தேர்தல்களில் பலமான கூட்டணியை வைத்து தான் வீழ்த்தினார்.

3.காசை போட்டு காசு எடுக்கும் வியாபாரம் எனத் அப்பட்டமாக தெரிந்த பின்னரும் திமுக அவ்வளவாக காசை இறக்கவில்லை.

4.கலைஞரின் தலைமையில் கழகம் செல்லும் ஆனால் ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருக்க வேண்டும்அது இளம் வாக்காளர்களை கவர்ந்திருக்கும்பல நடுநிலையான வாக்காளர்களின் ஆதரவும் கிடைத்திருக்கும்.

5.திமுகவில் முன்பு இருந்ததைப்போல தற்போதைக்கு அதன் கொள்கைகளை எடுத்துச்சொல்வதற்கு,2ஜிஈழம் போன்ற பல குற்றச்சாட்டுக்களை விளக்கி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கும் தப்பெண்ணங்களை நீக்கும்வண்ணமும்அரசின் ஊழலைஅவலத்தை எடுத்துச்சொல்லும் வண்ணமும் அடுத்த தலைமுறை பேச்சாளர்களை உருவாக்காமல் போனது அதுவும் பேச்சாளர்களுக்கு பெயர்போன திமுகவிலேயே என்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

6.காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி இருக்கக்கூடாது, அதிலும் கூட ஜெ. அழகாக முன்னெடுத்து அனைத்து தொகுதிகளிலும் தஙக்ள் கட்சியே நிற்கும்படி பார்த்துக்கொண்டார். அவ்வாறு நேரடி போட்டி நடந்திருந்தாலும் இன்னேரம் திமுக வென்றிருக்கும்.

7.தயாநிதி மாறன் போன்ற மக்களின் ஆதரவைப்பெறாதவர்களை இன்னும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றியது இதுவும் பார்க்கும் மக்களின் மனசுக்கு ஏற்றதாக இருந்திருக்கவில்லை என்பதும் கருதப்படவேண்டியது.

8.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்த பின்னரும் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள், அழகிரி பிரச்சனை என இன்னும் சில குளறுபடிகளை அடக்காதது.

9.பெண்களை கவரும் வண்ணம் இன்னும் பிரச்சார யுக்திகளை அது மேம்படுததாதது, பெண் பிரச்சாரகர்களை அதிகப்படுத்தாதது.

10. ஜெயிக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தும் வெற்றி தான் என இறுமாந்திருக்காமல் திமுக அதை மிக அதை அடைய மேலதிக உழைப்பை செயல்படுத்தாதது மிகப்பெரிய மைனஸ்.

என பெற்றிருக்க வேண்டிய அடைந்திருக்க வேண்டிய வெற்றியை பறிகொடுத்ததற்கு காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். ஏனென்றால் வெறும் ஒரு சதவீத வேறுபாட்டில் தான் தோற்றுப்போயிருக்கிறது. அது தான் பரிதாபம். அதுவும் அப்பாவு போன்றவர்கள் 49 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கின்றனர்.
ஆக, சிறுசிறு தவறுகள் சேர்ந்த அசட்டு அலட்சியம் திமுகவின் ஐந்து ஆண்டுகளின் அரசியல் வெற்றிப்பயணத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. எப்போதும் போல் ஜெ இம்முறையும் சூழலை லாவகமாகப் பயன்படுத்தினார் ஜெ.ஜெயித்தார் என்று சொல்வதைவிட திமுக தோற்றுப்போனது என்று சொல்வது தான் பொருத்தம். இந்த தோல்வியில் ஸ்டாலினின் ஒன்னரை ஆண்டு உழைப்பு, 93 வயது முதியவரின் அயராத போராட்டம் இதெற்கெல்லாம் பயன்கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏக்கம் தான் மேலிடுகிறது.


19-05-2016
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா