30 மே 2016

விடைபெறுதலின் சலனம்..!

காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து 
சொல்லும் வார்த்தைகளும்,
செய்யும் பாவனை முயற்சிகளும்
காட்டி கொடுத்து விடுகிறது உன்னை!

நீ பொத்தி வைத்த பொக்கிசங்கள்
ச்சீ… என்று எள்ளி நகையாடுகிறது

உன் வார்த்தைகளின் ஏக்க கூர்மைகள்
என்னை கொல்லாமல் கொல்கிறது

உன் விழியின் சோகம்
என்னை அம்பெடுத்து தைக்கிறது

நீ சிரிக்கும் சிரிப்பின் ஓரத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும் உன் இதய சோகம்
என்னை ஏளனம் செய்வதால்
நான் கண்டும் காணமல் இருக்கிறேன்.

சட்டென சோகம் சூழ்ந்தால் 
பட்டென அழத்தெரியும் உனக்கு, 


கொட்டும் அழுகை வந்தாலும்
கெட்டியாய் சிரிக்கத் தெரியும் எனக்கு!

என்ன  சொல்லவதடி ...
இப்படியும் தான் வாழ்கிறொமே..!?


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 -may- 2012
இதே நாளில்…

கருத்துகள் இல்லை: