25 மே 2016

எதிரியை வீழ்த்திய குதூகலம் பிஜே - அன்சாரி சந்திப்பு


எல்லாம் அரசியல்.. எங்கும் அரசியல் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான், பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு மஜக அன்சாரி பிஜே-வை அவர் அலுவலகத்தில் சந்தித்தார், நடப்பு அரசியலைப்பற்றி பேசிக்கொண்டனர் என்று பதிவுகளாக பார்க்கிறோம் இதை பார்த்த ததஜவினர் இனி உலகமே அமைதிப்பூங்காவாகிவிடும், அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்தது ஓர் வரலாற்று அற்புதம், இந்தியாவில் மோடி அரசின் இஸ்லாமிய துவேசப்போக்கு முடிவுக்கு வந்துவிடும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு இஸ்லாமிய பிரஜைக்கும் கோலார் தங்கச்சுரங்கத்திலிருது கிலோ கணக்கில் வெட்டிக்கொடுப்பார்கள் எனும் ரேன்ஜுக்கு ஆஹா… ஓஹோவென ததஜ.த்தினரும், மஜகவினரும் பாராட்டி பதிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த சந்திப்பு… இது பொதுநலன் சார்ந்ததா இல்லை சுயநல கொண்டாட்டமா என்றால்… வெரி சிம்பிள், அன்சாரி பேர.ஜவாஹிருல்லாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர் கட்சியை, அலுவலகத்தை மீட்க கோர்ட்டுக்கு போய் ஏமாந்தார் பிறகு தானே கட்சி ஆரம்பித்து ஜவாஹிருல்லாவை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று தீராபகை உணர்வோடு காத்திருந்தார், இதில் பிஜேவும் ஒரு காலத்தில் அவரது செயல்பாடும், வஞ்சக உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் பிடிக்காமல் ஒரே கொள்கை கொண்டிருந்தாலும் தமுமுகவால், பேரா.ஜவாஹிருல்லாவால் ஓரங்கட்டப்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால் பிஜேவும், அவரது இயக்ககுஞ்சுகளும் பேரா.ஜவாஹிருல்லாவை தமுமுகவை சதிசெய்து வீழ்த்த வஞ்சினம் கொண்டு அலைந்து கொண்டிருந்தனர். அது சாத்தியமானதால் இந்த தித்திப்பு சந்திப்பு அவ்வளவு தான்.



ஏனென்றால் நடந்துமுடிந்த தேர்தல் காட்சிகளில், சென்றமுறை சட்டமன்றத்தில் முதலில் ஜெ.வுக்கு புகழமாலை பொழிந்த பேரா.ஜவாஹிருல்லா நிலைப்பாடு மாறி எதிர்துருவமாக மாறியதால் ஜெயாவும் ஜவாஹிருல்லாவை வீழ்த்ததும் மனப்பான்மை கொண்டிருந்தார் சில கணக்குகளின் பிரகாரம் இந்நிலையிலும் பேரா.ஜவாஹிருல்லா கூட்டணிக்காக ஜெயாவை நாட அவருக்கு கார்டனின் கதவு திறக்காததால் பேரா.ஜவாஹிருல்லா திமுகவில் ஐக்கியமானார்.


அப்போது தான் கட்சி ஆரம்பித்த அன்சாரிக்கு எப்படியாவது தேர்தலில் நின்று ஜெயித்து பேரா.ஜவாஹிருல்லாவுக்கு வயிற்றெறிச்சலை உண்டாக்க வேண்டும் என்பதே லட்சியம் அதனால் எதிர் எண்ணம் கொண்டிருந்தாலும் ஜெயாவின் வீட்டு வாசலை தட்டினார் மஜகவை தூக்கிப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு சிறு தேவையும் இல்லாத ஜெயாவிடம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல முஸ்லிம் இயக்க ஆதரவு, பேரா.ஜாவஹிருல்லாவை வீழ்த்துதல்  என்ற அவரின் எண்ணத்திற்கும் எலி சிக்கியது. இரண்டு சீட் கொடுத்தார். ஒன்றில் ஜெயித்தார் அன்சாரி. ஜெவுக்கும் சந்தோசம்.

 எதிர்தரப்பிலோ பேரா.ஜவாஹிருல்லா உட்பட திமுக கூட்டணியில் இருந்த மமக ஒட்டுமொத்தமாக காலி,  அன்சாரி ஜெயித்த சந்தோசத்தைவிட மமக கூடாரம் காலி என்ற சந்தோசமே மஜகவின் அன்சாரியையும், மமக எதிர்ப்பாளர்களையும், குறிப்பாக பிஜே மற்றும் அவரின்ததஜ.த்தினரையும் கொண்டாடி திளைக்க வைத்தது. அதை இப்போது வரை முகநூலில் பகிர்வாக பார்க்கிறோம்.

ஆக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதையும், வீழ்ந்தவுடன் ஆகா அவன் வீழ்ந்துவிட்டான் என மகிழ்ச்சி ஆரவாரமிடுவதையும் தவிர பெரிய சமூதாய நோக்கங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த ஒரு முனையில் அன்சாரியும், பிஜேவும் ஒன்றிணைந்ததால் இருவருக்கும் பொது எதிரியான பேரா.ஜவாஹிருல்லா வீழ்ந்தததால் தங்கள் வெஞ்சினம் வென்றதை ஒருவருக்கொருவர் சந்தித்து சாதித்துவிட்டோம் என மகிழ்கிறார்களே தவிர வானத்திற்கும், பூமிக்குமாக மாற்றங்கள் தோன்றிவிட்டதாக வேயப்படும் இட்டுக்கட்டுகள் போல சமுதாய நலனுக்கெல்லாம் கடுகளவும் அதில் இடமில்லை என்பதை  தொடர்ந்து பதிவிடும் இயக்கபோதையில் சிகாமணிகள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என வெளியே அறிவித்துவிட்டு எதிரி பேரா.ஜவாஹிருல்லா சார்ந்திருப்பதாலும், மார்க்கவிசயத்தில் பாரம்பரிய வழியை பின்பற்றும் முஸ்லிம் லீக் இருப்பதாலும் இவர்களை வீழ்த்துவதே தன் தலையாய கடமை என இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு அற்பணிப்புடனும் உள்ரங்க வேலைபார்த்தனர் இந்த போலி தவ்ஹீத்வாதிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தேர்தல் முடிவு வெளியானதும் மமகவினர் தோற்றதை, முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தோற்றதை ஏதோ உலத்தில் கிடைக்கப்பெறாத ஒன்று தங்களுக்கு கிடைத்ததைப் போல ஆனந்தப்பட்டு ததஜக்கிவினர் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து முகநூலில் ஷேர் செய்தது முதல் இனிப்பு வழங்கி கொண்டாடியதை சமூக அக்கரையுள்ள யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

 வெறும் தங்கள் இயக்க அரசியல் சண்டைகளால் இந்த சமூகம் அரசியல் ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை, இந்த சமூகம் வீழ்ந்தாலும் பரவாயில்லை சட்டமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை  தங்களின் இயக்க எதிரி வீழவேண்டும் என்ற பொறாமை குணம் கொண்டு சமூக அழிவிற்கு அரசியல் ரீதியாகவும் ததஜ வழிவகுக்த்திருக்கிறது என்பதே இருவரின் சந்திப்பிலும், சென்ற தேர்தல் தொடர்பான நடைமுறையிலும் இந்த சமூகம் அறிய வேண்டிய உண்மைகள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: