30 மே 2016

முகநூல் நிலைத்தகவல் 30-05-2012

அவரவரின் செய்ல்பாடுகள் அவரவரின் பழகிப்போனநெஞ்சுக்கு நீதியாக தெரிகிறதே ஒழிய உள்நெஞ்சத்தின் நீதி அறையை அவரகள் தட்டாமலேயே தீர்ப்பில் சமாதானம் ஆகி, தான் பிழைக்கு அப்பாற்பட்ட தூயவன் என மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க அவரவர் நெஞ்ச நீதி!

J Mohaideen Batcha
ஆயிரந்தான் காசு பணம் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு சமூக அந்தஸ்து கிடைத்து விடுவதில்லை ஆனால் அந்த சமூகத்தின் போலி அந்தஸ்திற்காக இவர்கள் எதையும் அந்த காசு பணத்தால் செய்ய சித்தமாக இருக்கிறார்கள்.

பணம்.. பணம்... பணம்... என்று தான் எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். ஓடும் ஓட்டத்தில் சமூகம் குறித்து கூட வேண்டாம் தன் குடும்பத்தினரான சொந்த பந்தங்கள் குறித்து கூட வேண்டாம், அக்கம் பக்கங்கள் குறித்து கூட வேண்ட அட அவன் தன்னையாவது குறித்து சட்டை செய்து இன்றை நிமிடம் வாழ்கிறானா என்றால்.... கேள்விக்குறி தான்.. ஏன்றோ ஒரு நாளையை குறித்து அதற்காக சேமிக்கிறேன் என்று இன்றை, இந்த நொடியை எல்லாவற்றையும் இழக்கிறான், நட்புக்கள் எல்லாம் உப்பில்லாமல் போய்விட்டது இப்போது, உறவில் எல்லாம் இவனுக்கு நெருக்கம் குறைந்து போய் விட்டது இவன் சிந்தனை யாவிலும் ஒன்று தான் பணம்.... பணம்...பணம்...ஓடு.. ஓடு.. பிறகு சாவு!



ஞான சூரியர்கள் எப்போதும் சிலராகத் தான் இருப்பார்கள் ஞான சூனியங்கள் தான் அதிகமாக இருக்கும். பிரச்சனை உண்மையான ஞான சூரியர்களிடமிருந்தும், உண்மையான ஞான சூனியத்திடமிருந்தும் அதிகம் வராது.. சூனியமாக இருந்து கொண்டு சூரியனாய் நினைக்கிறார்களே அவர்கள் தான், அவரகளே தான் எல்லா பிரச்சனையும்.
என்ன செய்ய எல்லோருடனும் வாழத்தான் வேண்டும் சூனிமாகவே.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: