09 நவம்பர் 2014

உண்மை நிலை



உண்மையில்
உண்மையை எந்த வாசல்களும்
ஏற்றுக்கொள்வதே இல்லை...,

வேடம் தரித்து வந்தாலே
நம்பிக்கையுடன் இருக்கதவுகளும்
திறந்து வரவேற்கிறது.

உண்மை இது நாள்வரை
மூடப்பட்ட பொக்கிஷமாகவே
இருந்ததினால்...
உண்மை உடைகலைந்து வந்தாலும்
உலகம் நம்பத்தயாராக இல்லை.

பொய்யையே மெய்யென
நம்பிப் பழக்கப்பட்ட அவர்களுக்கு
இன்னும்.. இன்னும் பொய்யை
அளிக்கொடுத்து சந்தோசப்படுத்துங்கள்
அவர்கள் மனம் சாந்தி அடையட்டும்.

ஆனாலும்...
மழையினில் நனைகையில்
சாயம் வெளுக்கும் அச்சணத்தை
கண்டவர் யாரும்
இங்கே சொல்லத்தான் 
மீளப்போவதில்லை.

ஆதலால்...
இன்னும்.. இன்னும்
பொய்மை வலிமை பெற்றே
அரசோச்சட்டும் இங்கு.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…


சிறந்த பாவரிகள்
தொடருங்கள்