பேச வந்துவிட்டு
பேசாமல் போனதும் ஏன்...?
வாயெல்லாம் தேன் சுமந்தும்
வார்த்தைகளில் வடிக்காததும் ஏன்..?
மலர்ச்செண்டு கொண்டு
அடிப்பதையெல்லாம்
மகத்தான வலியென்றால்
எங்கே தான் போய் உரைப்பதாம்.
பரிதியின் ஒளியொத்த கண்களோடு
உறுதியாய் கணிவு கொண்டல்லவா
எத்தனித்து வந்தாய்....
பின், பின்வாங்கியதும்
அறமா.. நலமா..???
பாசத்தின் வாசத்தில்
கிள்ளுதல் அள்ளுதல்
செல்லமாய் தள்ளுதல்
அன்புத்தொல்லையால் கொல்லுதல்
எல்லாம் கூட சகஜமன்றோ....
இதெற்கெல்லாம் உன்மூக்கு
உதட்டோடு போட்டியிட்டுச் சிவந்தால்
நீதிதேவதை அழவல்லவா செய்வாள்..!
தாமதிக்காது வாயடி
என் வாயாடிப் பெண்ணே...!
தேக்கி வைத்திருந்த
வசந்தங்களை யெல்லாம்
உன் வார்த்தைத்தைகளால்
என் நெஞ்சத்தில் அள்ளி வீசு!
நம் அன்பினில் ஏதடி மாசு!!
வா.. வந்து பேசு!!!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
1 கருத்து:
அருமை நண்பரே...
கருத்துரையிடுக