10 ஜூன் 2012

விடைப்பெற்றார் S.Y. குரைஷி



இன்று விடைபெற்ற ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி, தலைமை தேர்தல் கமிஷன் ஆணையர் டெல்லிக்காரர், 1947 ஜூன் 11ஆம் நாள் பிறந்த இவருக்கு வயது 64, பல மத்திய அரசாங்கம் சார்ந்த துறைகளில் பணியாற்றி இறுதியாக இந்திய திருநாட்டின் 17 வது தலைமை தேர்தல் ஆணையராக 30 ஜூலை 2010 அன்று பொறுப்பேற்று இன்றுவரை பல சவால்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் தேர்தல் ஆணையத்தில் மட்டும் 35 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக தொலை தொடர்பு மற்றும் பொது வணிகம் இவற்றை எப்படி பயன்படுத்து என்பது குறித்து ஆராய்ந்து முனைவர் (பி.எச்.டி) பட்டம் வெற்றவர். இவர் சமூக விழிப்புணர்வு குறித்தும், ஜனநாயகம், தேர்தல் முறை, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், எயிட்ஸ்.. என இவைகள் குறித்து எண்ணிறந்த புத்தகங்களையும் எழுதிய எழுத்தாளர் என்பது இவருக்கு மேலும் சிறப்பு.

ஒரு பொது நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவின் தலைசிறந்வர்களின் பட்டியலில் 7வது இடத்தினை பெற்றிருந்தவர். தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் இவர் பணிபுரிந்த சமயத்தில் எயிட்ஸ் நோயாளிகளுக்காக இவர் பல சேவை மிகவும் போற்றுதலுக்குறியதாக இருந்ததாக கூறுகின்றனர். நமது தூர்தர்சன் தொலைக்காட்சியில் அவர் தலைமை இயக்குனராக சேர்ந்து பல மாற்றங்களை உட்புகுத்தினார் என்பதும் இவரது சாதனையாக சொல்லப்படுவதாகும். மேலும் ஹரியானாவில் மின் மற்றும் மரபுசாரா மின்சார மையத்தை உலக வங்கியிடமிருந்து 600 மில்லியன் டாலரில் புதுப்பித்து மிகச்சிறந்த லாபம் ஈட்டும் நிறுவனமாக ஆக்கிக்காட்டிருக்கிறார். இதை உலக வங்கியே சான்றுபகர்கிறது. இது அல்லாது பலதுறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய புகழுக்கு சொந்தக்காரர் குரைசி. இவர் ஒரு இசைப்பிரியர் என்பது கூடுதல் தகவல்.

இவர் சமய நல்லிணக்க பாதாகை, நேரு அதீத மற்றும் நவீன குழந்தைகள் நலன் அமைப்பின் தேசிய பதாகை உட்பட பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளின் சிறந்த கேடயங்களை வென்றவர்.  இப்படியான பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையை அயராது செய்த நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர் குரைஷி அவர்களை வாழ்த்தி மகிழ்வோம் இன்னும் அவரது சேவை நமது நாட்டுக்கு மேலும் தொடரட்டும்..

இவர் போன்ற சிறந்த வெற்றிச்செல்வர்களை முன்மாதிரியாக கொண்டு நமது சமுதாய கண்மணிகள் பயணம் தொடர வேண்டும் என்பதே இந்த கட்டூரையின் நோக்கம். இளைஞர்கள் சமூதாய துடிப்பு கொண்டவராகவும் பரந்த எண்ணம் கொண்டவராகவும் சிறக்க எடுத்துக்காட்டே குரைஷி.

வாழ்க குரைஷி!

வாழ்க பாரதம்!!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yembal Thajammul Mohammad சொன்னது…

Thambi, super article!Much informative! Congratulation!!