29 நவம்பர் 2013

துபாய்!

உழைக்க இடந்தந்து
பிழைக்க வழிதந்து
கண்ணில் ஒளிதந்து
மகிழ்ச்சி களிதந்த தேசம்.

*

ஊழல் இல்லாத சூழல்

கூணல் இல்லாத அரசு

*

களவாணி அரசியல்வாதிகள் இல்லாத தேசம்
கரண்ட் கட்டுகள் இல்லாத பிரதேசம்.


*


உழைப்பாளிகள் கட்டிய இமயம்,
களைப்படையாத நிலையம்.






-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 நவம்பர் 2013

உறைந்து கிடக்கிறது !



சுற்றுச்சூழல் அனைத்தும்

சூனியம் செய்கிறது,
நற்சிந்தனைக்கு.

*


விருப்பமுடன் வளர்த்த அன்பின் கோட்டை அடியோடு சாயும்
நாவில் சறுக்கி விழும் ஒற்றைச் சொல்லால்!

*

வளர்ந்ததில் வெறுப்பே மேலிடுகிறது

குழந்தையின் குணத்தை கொலைசெய்தோம்!

*

சேகரிக்கப்பட வேண்டிய 

முத்துக்களை சிந்தியே செல்கிறது.
மழலை!

*

கூர்மையான ஆயுதங்கள் ஏதும் வேண்டாம்
வேல்விழி பார்வை ஒன்று போதும்
என்னை கொல்ல!

*

உண்மையில்

வேலையில்லாத நாட்களில் தான்
மூளை வேலை செய்கிறது.

*


இன்னும் என்ன சொல்ல!
திண்ண திண்ண திகட்டா சுவை,
வண்ணக் கண்ணம்!

*

சச்சரவுகளின் சுற்றுச்சுவர் வலிமைபெறுகிறது,
அவ்வப்போது நடக்கும் நீயா நானாவில்.

*

மறைந்து கிடக்கவில்லை எங்கோ,

உறைந்து கிடக்கிறது நம்மில்.
மகிழ்ச்சி!

*

உடையும் என்று தெரிந்தே

நொறுக்கப்படுகிறது.
இதயங்கள்!

*

வான்மதி பார்த்தால் வரும் நிம்மதி - நம்
திருமதிகளை பார்த்தால் நிர்கதியாகிவிடுகிறது.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 நவம்பர் 2013

சிறப்பான தலைவர் நேரு!



வாசித்தல் எனக்கு ஆசிய ஜோதி ஜவஹ்ர்லால் நேரு மீது மதிப்பையும், மரியாதையையும் தந்திருக்கிறது. அவர் அகில இந்திய தலைவர் என்பதையும் மீறி சர்வ தேச அளவிலும் மதிக்கத்தக்க சிறப்பான ஆளுமையாக இருந்தார். அவருக்கு பின் இந்திராவை சொல்லலாம். இவர்களுக்கு பிறது இந்தியாவிலிருந்து சர்வதேச ஆளுமையாக மதிக்கத்தக்க ஒருவரை சுட்டிக் காட்டுவது வெற்றிடமாகவே இருக்கிறது.

நேரு மிகச்சிறந்த தலைவர், பன்முகம் கொண்ட இந்திய சமூகத்தில் பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை வழி நடத்தியவர்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், படேல் போன்ற பாசிச சக்திகளை லாவகமாக கையாண்டு இந்திய துணைகண்டத்தின் பாரம்பரிய பெருமைக்கு விபரீதம் நேராமல் காத்தவர். இப்படியாக நேருவின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், ஃப்ரீடம் அட் மிட் நைட்"  என்ற இரண்டு உலகப்புகழ்பெற்ற புத்தகங்களை படிக்க பெரும் ஆவல்.

குழந்தைகளின் மீது பேராவல் கொண்ட நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக இந்தியா முழுவது கொண்டாடி களிக்கிறது.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இனிப்பு வழங்குவார்கள். குழந்தைகள் மகிழ்வார்கள்.

அனைவருக்கும் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் (குழந்தைகள் தின) வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 நவம்பர் 2013

என் கேள்விக்கென்ன பதில்..?


நாயகன் படமெல்லாம் பார்த்ததில்லை இவன், பார்த்திருக்க வேண்டுமே என்றெண்ணும் அளவுக்கு இவனுக்கு வயதும் இல்லை.

ஆனாலும் சில கூட்டங்களுக்கு அழைத்து செல்கையில் மேடையில் யார் தோன்றினாலும் என்னைப் பார்த்து கேட்பான் " இவர் நல்லவரா..? கெட்டவரா..?

யார் அழைபேசியில் அழைத்தாலும் என்னைப் நோக்கி கேட்பான் "நீ இப்போது பேசியவர் நல்லவரா..? கெட்டவரா..?

முகநூல் பார்த்தால் பக்கத்தில் அமர்ந்து கொண்டு முகங்களை சுட்டி என்னை விழித்துக் கேட்பான் " இவர் நல்லவரா..? கெட்டவரா..?

இவர் நல்லவரென்றாலும், கெட்டவரென்றாலும் விடாது ஏன்? எப்படி? என்றெல்லாம் வினவி எளிதில் சமாதானமாக மாட்டான் என் மகன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07 நவம்பர் 2013

அமீரகத்தில் அருள் மழை!

அமீரகத்தில் அருள் மழைப் போல பனிமழைப் பெய்கிறது.

மாலை ஐந்துரை மணி நெருங்கும் வேலையிலெல்லாம் முழுவதும் இருட்டிட எல்லா முஸ்தீபுகளையும் எடுத்திருந்தது வானம். நேற்று முன் தினம் அடித்த மணல் காற்று பனி ஆரம்பிக்க போகிறது என்ற சூழல் மாற்றத்திற்கான அறிகுறி. அதன் விடையாக இன்று பனி மாலை வேலையிலேயே கடைபோட ஆரம்பித்துவிட்டதை துபாய் பைபாஸ் சாலையின் இருமருங்கிலும் கண்ணுக்கு எட்டும் இருக்கும் பாலைவெளி தெளிவாக தெரியாதவாறு பனிப்படலம் அலசலாக திரை அமைத்து அற்புத சூழலை உண்டாக்கி வைத்திருந்தது, அதுவும் வாரக் கடைசி மனநிலை கூடுதல் குதூகளம் தந்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 நவம்பர் 2013

அகமலர்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



திருநாட்கள் வாழ்வில் அவசியம்
திருநாட்கள் நம்மை புதுப்பிக்கிறது
திருநாட்கள்  நமதுக்கு குதூகல‌ம் அளிக்கிறது
திருநாட்கள் நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது
திருநாட்கள் நமக்கு சிறப்பான மகிழ்வளிக்கிறது
திருநாட்கள் நம்மை நமது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க ஆவன செய்கிறது.

தீபாவளிக்கும் தமிழருக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என விவாதித்தல் வீண்னெபேன் நான்,

நரகாசுரனை கொன்றதாலோ அல்லது இல்லையோ

ராமன் வனவாசம் விட்டு வந்ததாலோ அல்லது இல்லையோ

நம்மை கொண்டாட ஒரு நாள்.. நாம் மகிழ்திருக்க ஒரு நாள்

ஆதலால் கொண்டாடுங்கள் தீபாவளி திருநாள்!

நண்பர்கள் அனைவருக்கும் என் அகமலர்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா