22 ஆகஸ்ட் 2023

துரோகிஸ்டார்



பெயரிலேயே இணைந்திருப்பதால்
யோகியும் அல்ல.. - அவன்
யோக்கியனும் அல்ல..

காவி தரித்திருப்பதால்
துறவியும் அல்ல - அவன்
துறந்தவனும் அல்ல..

மத அரசியல்
மாட்டு அரசியல் என
வெறுப்பு அரசியல் செய்யும்
கருப்பு அரசியல் வாதியவன்.

பாமர நெஞ்சத்தில்
பாசிச வெறியேற்றுபவன்,
பாசமுள்ள பக்கத்து வீட்டான்

முஸல்மான் என்றால்
புலிக்கு மான்
அகோர வேட்டையாடு
ஆசி உண்டென்பவன்.

அரசியல் லாபத்திற்காய்
அறமில்லா மனங்களை
அபயங் கொடுத்து வளர்ப்பவன்.

இன அழிப்பின் அட்டூழியம்
நீதி நியாயம் கேட்டால்
வீடு இடிக்க புல்டோசர் வரும்.

அன்பில்லா நெஞ்சத்தார்க்கு
ஆயுதங் கொடுத்து மனிதம் அழிப்பதா?
கேட்டுவிட்டால் எண்கவுண்டர் தான்.

சோசியல் மீடியாவில்
பாசிசம் எதிர்த்துப் பகிர்ந்தால்
போலிஸ் லாக்கப்.

மண்ணில் நடந்ததை
மாற்ற முடியாது - இஸ்லாமிய
மன்னர்கள் ஆண்டதையும்
மறுக்க முடியாது என்பதெல்லாம்
இவன் உச்சந்தலையில் நச்சரிக்கும்.

அதனால் தான்
அலாஹாபாத் உட்பட
அழகிய இஸ்லாமிய பெயர்ப் பலதை
வன்மமாய் மாற்றிப்போட்டான்.

பாலகர்கள் படிக்கும்
பள்ளி புத்தகத்தின் சரித்திரத்தில்
சுள்ளி வைத்து கொள்ளி வைத்தான்.

இதெல்லாம் நாடறிந்தது,


ஊருக்கே அயோக்கியன்
சங்கி ஸ்டாருக்கு மட்டும்
கடவுளாகத் தான் தெரிகிறானாம்.

போடும் வேடம்
ஹீரோவானாலும்,
நம் மண்ணுக்கு
வில்லன் இவன்.

அறிவாளி போல் பேசும்
கோமாளி இவன்.

ஆரிய சித்தாந்தம்
தமிழ் நாட்டில் வேர் பிடிக்க
காவிக்கு ஆள் பிடிக்கும்
கால் பிடி கபடனிவன்.

கலைஞர் முதல் அறிஞர்கள் பலர்
பக்கத்தில் இருந்தும்
மூளை வளராத முடமிவன்.

வானத்து நட்சத்திரம் போல
கொண்டாடிடும் ரசிகர்களால்
சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தும்
குப்பையில் சேரும் சருகு இவன்.

தமிழ்நாடு தலையில் வைத்துக் கொண்டாட
புல்டோசர் வாயன் காலை
உ(த்)திரப்பிரதேசத்தில் தேடி ஓடுபவன்.

நல்லவேளை துரோகிஸ்டார்
கட்சி ஆரம்பிக்கவில்லை,
பத்து பைத்தியம் இவனுக்கும்
கொடி பிடித்திருக்கும்
தமிழ் நாடு தப்பித்தது.

தூத்துக்குடி போராட்டக்காரர்களை
சமூக விரோதிகள் என்று
முதுகில் குத்தியதை ஏனோ தமிழர் மறந்தோம்.

ஆனால், ஆஸ்பத்திரியில்
போராட்ட இளைஞன் கேட்டானே
அந்த கேள்வி தான்
எல்லார் நெஞ்சிலும் இப்போது


ஆமா… யார் நீங்க?
துரோகிஸ்டார்


-ஜா.மு