20 அக்டோபர் 2018

திருச்சி தப்லே ஆலம் பாதுஷா


பல்லவி:
திருச்சிராப்பள்ளி திகழ்கின்ற பேரொளியே

அனுபல்லவி:
தப்லே ஆலம் பாதுஷா தீனொளியே
முதஹ்ஹருத்தீன் நத்தர்ஷா நூரொளியே


காவிரி கரைமேவிடும் நகரிலே -ஞான
தீனொளிச் சுடர் பொழிந்திடும் நத்ஹராம்
உத்தமர் மகிமைதனை கேளுங்கள் கேட்டு..
உள்ளத்தில் ஈமான் வலு கூட்டுங்கள்.

சரணம்:

சிரியாவை ஆண்ட மன்னர் அஹமத் கபீர் மறையவே
சிரியவராய் இருந்தநமது முதொஹ்ஹருத்தீன் மகுடம் சூடினார்
ஏழாம் வயதில் இருந்தே அரசாள தொடங்கினார்
இருபத்து ஓராம் வயதில் மனம் இறைஞானம் நாடவே
அரசோச்சும் முடியைத்துறந்து ஆண்டவனை தேடினார்
அன்னையிடம் ஆசிகள்பெற்று அமரகுருக்காய் ஏங்கினார்
அற்புதர் ஷைகு அலியின் கரம்பற்றி ஓங்கினார்

நெறியோடு வாழ்ந்த எம்மான் அணையாத ஆவலால்
பெருமானார் உறையும் மதினா பெரும்பதிக்கு சென்றனர்
ஓராண்டு காலம் தங்கி  இஷ்காலே கரைந்தனர்
இனிய நெறி இஸ்லாமதை இந்தியாவிலே பரப்பிட
பெருமானார் பேரர்தமை பெரன்பில் பணித்தனர்
தொல்லாயிரம் சீடர்களோடு அல்லாவின் நாம்ம் சொல்ல
எல்லையை அடைந்தனர் தென்னகம் சேர்ந்தனர்

அல்லாவின் நேசர் வந்து எல்லோர்க்கும் நன்மைசெய்தும்
பிள்ளைவரம் இல்லாது அரசகுடும்பம் தவித்தது
சோழனின் குடும்பத்தினிலே சோபிதமே இல்லையே
அரசாண்ட சுந்தரச் சோழன் மனம்வெதும்பி வாடினான்
வாரிசு அருள்கவென்றே பாதுஷாவை வேண்டினான்
அவன்நேசர் வாய்திறக்க ஆண்டவனும் இசைந்தனன் - ஆதித்ய
கரிகாலன் குந்தவையுடன் ராஜராஜனும் தோன்றினர்

தென்னகத்தின் மன்னரெல்லாம் தினம்தொழுத மெய்ஞ்ஞானி
காற்றெல்லாம் கிர்த்திசொல்லும் கலந்தரிவர் புகழ்தனை
ஹிந்துஸ்தானம் வந்த முதல் வலியுல்லாஹ் நத்ஹராம்
ஆயிரத்தை தாண்டி ஆண்டில் அரசாளும் நேசராம்
பாயிரத்தை பாடினாலும் நாதர்மகிமை தீருமோ
தாயைத்தேடி அண்டும் செய்போல் தயைகேட்கும் நேசரின்
மனக்குறை அகற்றுகின்ற மன்னாதி மன்னராம்

-ஜா.முஹையத்தீன் பாட்ஷா 4-6-17





கருத்துகள் இல்லை: