25 அக்டோபர் 2018

பாதி தூக்கத்தில்


பாதி தூக்கத்தில் 
தூங்கியும் தூங்காமலும்
இப்போது இங்கே
உட்கார்ந்திருக்கிறேன்

மனதில் ஒன்றும் தோன்றவில்லை
இதை எழுதுவதைத் தவிர

ஒன்றுமற்ற வெள்ளைத்திரை
அடர் கருப்ப்பாக  இருக்கிறது
ஒரு சிந்தனையும் இல்லாத
இப்போதைய எந்தன் மனது

சற்று நேரத்திற்கு பிறகான
சாயந்திரம் நான் எப்படி இருப்பேன்
எதை எதை எழுதுவேன்
என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது

இப்போது என் மனம் வெற்றுத்திரை
பின்னால் என்ன திரையில் ஓடும்
வெள்ளைத்திரை வெள்ளித்திரையாகுமா 

அப்போதைய சனம் முடிவு செய்யட்டும் தானே.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
9/8/18 4.15

கருத்துகள் இல்லை: