08 ஆகஸ்ட் 2018

தமிழர்களின் அறிவாலயம்



என் பாட்டியம்மாவுக்கு பிடித்த
ஒரே தலைவர் நீங்கள்!
என் தகப்பனார் என்றும்
ஏற்றும் தலைவர் நீங்கள்!
என் இதயம் நிறைந்து ஆளும் தலைவரும் நீங்கள்!
எங்கள் பிள்ளைகளுக்கு
பிடித்த தலைவரும்
நீங்கள் தானே கலைஞரய்யா!
கலைஞர் எங்கே
அடக்கப்பட்டாலும்
அதுவே தமிழர்களின்
அறிவாலயமாக எழும்.
அதுவே திகழும்
ஆதவன் வாழும்
கோ இல்.
உண்மையாகவே
என் கட்டுப்பாட்டில்
நானே இல்லை
நானே என்னை
தேற்றிடத் தோற்கிறேன்
புழுங்கி அழுது தீர்க்கிறேன்
கண்களில்
கடல் புகுந்ததோவென
அறியவில்லை...
நீர் தாரைகள் நிற்கவேயில்லை
உனக்கும் எனக்குமான உறவிற்கு
உயிர் போகாது தலைவா!
கலைஞர் மறைந்த போது
07-08-2018