09 பிப்ரவரி 2023

அறியாதபுரம் : நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் - முஹம்மது பிர்தெளஸ்

J Mohaideen Batcha கவிதைத் தொகுப்பு வாழ்வின் பல பரிமாணங்களை காண்பிக்கிறது. குழந்தை, பருவ வயது, காதல் வயப்பட்ட பையன், வாழ்க்கையைப் பற்றி குழம்பும் 30+ வயது உடைய மனிதன், முதிர்ச்சி பெற்ற பக்குவப்பட்ட மனிதன், ஜென், சூஃபிசம் என பல வாழ்வையும் இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.
சமகாலத்துக்கேற்றவாறு பின்நவீனத்துவ கவிதைகளையும் அள்ளி தெளித்திருக்கிறார். எ.க: "கொடும் லாவா மனதில் இருக்க பெரும் லாவகம் காட்டாதே; நைட்ரஜன் குண்டுகள் எறிந்து கொண்டே நைசாகப் பேசி மெழுகாதே"
இங்கு யாருக்குமே வாழவே தெரியல என்கிற மாதிரி சில கவிதைகள்,"எல்லோரும் அதிகம் வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனாலும், வாழ்தல் என்பது தான் பெரும்பாலும் நிகழ்வதே இல்லை."
நிலாவை பெண்ணோடு மட்டும்தான் ஒப்பிட முடியுமா, விரல் நகத்தோடும் ஒப்பிடலாம் என்பதை அவர் கவிதை வரிகள் காட்டுகிறது, "குட்டி குட்டி நிலவாகத் தோன்றினாலும், வெட்டித்தான் எறிய வேண்டும் விரல் நகத்தை!"
தன் தாய் மொழியை நேசிக்கிறவனால் மட்டுமே கவிதையையும் நேசிக்க முடியும். ஏனென்றால், அந்த மொழிதான் கவிதைக்கு அழகையும் ஆற்றலையும் தருகிறது. அந்த வகையில் இப்படி ஒரு கவிதை, "அவசரத்தில் அழைக்கும் போது அந்நிய மொழி கை கொடுக்காது. அன்னை மொழிதான் அனிச்சியாய் வரும்!"
(நல்ல கவிஞனைவிட மோசமான கவிஞன் தன் வாழ்நாளில் ஈட்டிக்கொள்ளும் வெற்றிகள் அதிகமாக இருப்பதால் அவனை மோசமான கவிஞன் என்று நிரூபிப்பது கடினமாகவே இருக்கும். ஏனெனில் அவன் தொடர்ந்து சபையோரின் கரகோஷங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறான்.
புகழ்பெற்ற மோசமான கவிஞனை மோசமான கவிஞன் என்று நாம் கூறும்போது அவன் நம்மீது அவனுடைய புகழை விட்டெறிவான். புகழ், கவிதையின் குணத்தைத் தீர்மானிக்காது என்று நாம் சொல்ல முற்பட்டால் அவன் அவனுடைய புத்தகங்களை விட்டெறியத் தொடங்குவான். அவை எண்ணிக்கையில் மிக அதிகமானவை. அத்துடன் தடிமன் ஆனவையும்கூட.
- ந பிச்சமூர்த்தி)
இந்த நல்ல கவிஞனுக்கும் கேலக்ஸி பதிப்பகத்துக்கும் என்
வாழ்த்துகள்
.
நன்றி Balaji Baskaran





03 பிப்ரவரி 2023

அறியாதபுரம் .. ஆலஞ்சி முஹம்மது மன்சூர் கருத்துரை


தம்பி ஜா.முஹையத்தீன் பாட்சா J Mohaideen Batcha (ராஜாமுகமது) எழுதிய கவிதை தொகுப்பு..
..
தம்பியை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன்.. பொதுவாழ்வு ஆன்மீகம் என நாட்டம் கொண்டவர் நிறைய படிப்பவர் .. நல்ல இஸ்லாமிய கவிதைகளை தந்திருக்கிறார். பலதரபட்ட விடயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அதை சரியாக உணரும் திறமையும் கொண்டவர்.. நல்ல பேச்சாளரும் கூட.. அவரின் அறியாபுரத்தை தந்திருக்கிறார் ..
..
கவிதை நூல்..
எந்தவொரு புத்தகமாயினும் படிக்கும் போதே நம்மோடு பேசும் .. மெய் மொழிகிறதா இல்லை புனைவா என்று .. தம்பியின் கவிதை யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்லிவிடுகிறது
வாழ்தல் பற்றி
எல்லோரும் அதிகம் வாழ ஆசைபடுகிறார்கள் .....
என்றுமே "வாழாதது தான்"
வாழ்தல் என்பது நிகழ்வே இல்லை என்கிறார் ..
எல்லோரும் எதோவொன்றுக்காக வாழ்கிறோமே தவிர "வாழ்வை " சரியாக வாழ்தே இல்லை..
..
எல்லா தண்ணீரும் புனிதம் தான் என போட்டு உடைக்கிறார் .. "ஞானியின் சட்டையில்"
கடைசிவரை இறைவனைப் பற்றி மட்டும் சொல்வே இல்லை ..
ஞானியின் கண்ணாடியை கூட தொட முடியவில்லை என அஞ்சாமல் உண்மையை சொல்கிறார்..
Fear is the beginning of wisdom..
அஞ்சுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பார்கள் உண்மையில் தேடுதலே ஞானத்தை நோக்கிய நகர்வென்பேன்
தேடுதலே ஞானத்திற்கு வழிவகுக்கும்..
..
நாத்திகர்களையும் விடவில்லை
அறுதியிட்டும் அவர்கள் சொல்லும்
"இல்லை" என்பது தான் உண்மை
இல்லை எனும் அவ்வுண்மைக்குள் (#لة )اللة) (லா) என்றால் இல்லை என்ற பொருளை உட்கொண்டு பேசுகிறார்)
அவர்களால் போகத் தெரியாமலிருப்பதாலோ அல்லது பிடிவாகமாக போக மறுப்பதாலோ "#இல்லை" என்ற எல்லைக்குள் நிற்கின்றார்.. என்கிறார் ..
தெளிவாக விளங்க முடிகிறவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும் .. ஞானத்தின் சிறப்பு இது ..
..
தம்பியின் முதல் கவிதை தொகுப்பு
பலதரப்பட்ட கவிதைகள் தஞ்சாவூர் கதம்பம் போல இருக்கிறது .. எளிய நடையில் நல்ல மலர்களால் பூங்கொத்து செய்திருக்கிறார் ..
இன்னும் நிறைய எழுத வேண்டும் .. எழுத்தாளர் சுஜாதா "புதுக்கவிதை " இஸ்லாமியர்களின் கைவசம் என்பார்..
கவிதைகளில் இஸ்லாமியர்களுக்கு தனி இடமுண்டு .. பெரும் பட்டியல் அது .. அந்த பட்டியலில் தம்பி "ராஜாமுகமது " நிச்சயம் இடம் பெறுவார் ..
..