23 பிப்ரவரி 2026
மழை
06 பிப்ரவரி 2026
வீண்
01 நவம்பர் 2025
சிராஜுல் மில்லத் என சீலம் அழைக்கும் சீலர்
அன்புத் தலைவரே
அருள்மிகும் சிங்கமே
சிராஜுல் மில்லத்தென
சீலம் அழைத்த சீலரே
உங்களைக் குறித்து
என் நினைவுகளை எழுத
நிறைய எழுத்துக்கள் தேவை - ஆனால்
கொஞ்சம் தான் எழுதப்போகிறேன்
இது என் உணர்வுகளின் கோர்வை!
உங்கள் குணாதிசயம் போலத்தான்
உங்களைப் பற்றி எழுதினாலும்
தமிழும் சாந்தமாகவே பிறக்கிறது
மணக்கும் சந்தனமாகச் சிறக்கிறது!
அமிழ்தாம் மறைகுர்ஆன்
தமிழ் தனில் தர்ஜுமா
கமழ்ந்திட எங்கெங்கும்
ஓதிடும் போழ்தினிலெல்லாம்
அகதோன் மகிழ்கிறான் - அப்துல்
சமதிற்கும் அருள்கிறான்.
ஏனெனில்,
இலட்சம் சிறப்புகள்
பெற்றத் தமிழ் மொழி
இரட்சகன் பேசிய
வேதவழியும் பெற,
தந்தையுடன் முழுச்சிந்தையுடன்
வேதத்தமிழுக்கு செய்திட்ட
திருத்தொண்டு அது
இளம் வயதிலேயே
இறைவனுக்காய் நீங்கள்
ஆற்றிய பெருந்தொண்டு.
தலைவர்....
பல்துறை சார்ந்த அறிவில்
மேதாவிசாலம் கொண்ட நூலகம்
மண்தரை மக்களை அணைப்பதில்
மாதாவிசாலம் கொண்ட வானகம்.
அவர்...
பாராளும் இறைவனின்
பேராலயம் கழுவ
அரபு நாடாளும் அரசரின்
விருந்தினரானார்.
தேவாலயத் தலைவர்
போப்பாண்டவர் அழைத்து
ரோம் தலைநகர் வாடிகன் செல்ல
எல்லோரும் அதிரச நல்லிணக்கம்
அறுஞ்சுவை அருந்தினாரானார்.
சிராஜுல் மில்லத் பேசினால்...
சலசலக்கும் ஓடையும் கூட
சத்தம் நிறுத்தி சந்தம் கேட்கும்
சிலுசிலுக்கும் தென்றல் காற்றும்
உலவ மறந்து உரையைக் கேட்கும்
கொள்கையில்
சுட்டு வீசும் "சூரியனும்"
கட்டுப்பட்டு தமிழ் சுவைக்கும்.
மக்கள் மனம் வென்ற "சந்திரனும்'
கன்றெனவாகி தமிழ்மடி சேரும்.
'அல்லி'க்கும் கூட அவர்
சொல்லின் மீது பிரியம் வரும்.
அழகிய குரல் நாதவினோதத்தில்
உள்நுழைந்து வந்த போது தான்
தமிழே தன் குளிர்ச்சியை
தானே சுவைத்து குளிர்ந்தது
கிளர்ச்சி அடைந்து மகிழ்ந்தது.
மேடைப்பேச்சின் மன்னவரவர்
இனிய சொற்கள் மூலமே
பெரிய சமரொன்றைப் புரிவார்
அவரின் சொல் மாறி
அபாபீல்கள் கால் சுமந்த
சொற்'கல் மாரியாக
எதிரிகளின் இதயத்தில் விழும்
சிலிர்த்து வியக்கும் நிலம்.
அப்துல் சமது
சொன்னால்..
சமுதாயம் தமது
என்று ஏற்றது ஓர் காலம் - அது
சமது என்றால் சமுதாயம் என்ற
அழகியநிலாக் காலம்.
இஸ்லாமிய சமூகத்தின் இணக்கமான
கால் நூற்றாண்டுத் தலைமை அவர்
சமுதாயத்தை யார் வந்தும் சீண்டாது
வால் ஒடுக்கி அடக்கிவைத்த தலைவரவர்
நமக்குள்ளேயே நாள் முளைத்து வந்த
இயக்கங்களெல்லாம் கால் பதிக்காமல்
காத்திட்ட பெருஞ் சுவரவர்
அப்துல் சமதவர்....
எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சிறப்பு
திமுகழகத்திற்கும்
முஸ்லிம் லீக்கிற்கும் கிடைத்தது.
அது கலைஞர் கருணாநிதி
அறிஞர் அப்துல் சமது என்ற
பன்முக ஆளுமை
தலைமையாய் கிடைத்தது.
திமுகவோடு கூட்டணி முறிந்தால்
முகவிற்கும் சமது சாஹிபிற்கும்
நடக்கும் பத்திரிகை
அறிக்கை அம்புகளுக்காக
தெறிக்கும் மேடைபேச்சால் நடக்கும்
வேல் வீச்சுக்களை நாடே ரசித்திருக்கும்
எந்த சூழலிலும் அவர்தம்
தமிழ் இன்பம் கொடுக்கும்.
நிலம் உழுது பயிர்வளர்த்து உணவூட்டும்
உழவன் போல - உணர்வோடு
களம் கண்டு கட்சிவளர்க்கும்
தொண்டன் மீது
எப்போதும் ஒப்பில்லா
அன்பைப் பொழிவார் தலைவர்.
பாசத்தலைவரை பார்த்துப்பார்த்து
சீனியில் சிக்கிய எறும்பாவான் தொண்டன்.
மொய்க்கும் தொண்டர்களின்
மனம் ஜெயித்தது
அவர் கரிஷ்மாவால் மட்டுமல்ல..
காட்டிய கரிசனத்தாலும் தான்.
ஆனால் அவரின்
முகமலர் பார்க்காத
அகமலர் திறந்த
எழுச்சிப் பிறைக் கொடி
இளைஞர் கூட்டம் எழுந்து வருகிறது
அந்த இணையக்கூட்டம்
இணைந்தே தேடி இன்று
புதைந்த சரிதம் மீட்கின்றது.
சரித்திரம் பதிய சகுனம் பார்ப்பதா?
நிகழ்ந்ததைக்கூற நேரம் காலமா?
தியாகத்தை நினைக்க தேதி தேவையா?
இத்தனை நாள் வித்தகரது
முத்தான வரலாறு
எத்தாமல் போய்விட்டதே
என்று நித்தமும் தேடி
இணையத்தில் பகிர்கின்றார்
இன்பத்தைப் பகர்கின்றார்
இதயமெலாம் பசுமை படர்கிறது.
அது மட்டுமல்ல..
சிங்கத்தலைவரவர்
சங்கத்தமிழ் முழக்கம்
எங்கு கிடைத்திட்டாலும்
யாரிடம் எந்த ஊரிலும் இருந்திட்டாலும்
பிறைக்கொடி பேரிளங்கூட்டமே
ஓடிச்சென்று
சேகரம் செய்திடுவீர்
நாடு நகரமெல்லாம் -
இன்பத் தமிழ்
சாகரம் காணட்டும்
இணக்கத்தமிழை
இணையத்தில் ஏற்றிவைப்பீர்
வணக்கத்திற்குரியவன் உங்களை
எல்லார் இதயத்திலும் ஏற்றிவைப்பான்.
அன்புடன்,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
24 அக்டோபர் 2023
ஏது பதில்?.
பாவப்பட்ட உண்மை
காஸாவின் பூனை
சிட்டுக்குருவியை உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்!
06 அக்டோபர் 2023
வன்மம் மட்டும் கருப்பொருள்
22 ஆகஸ்ட் 2023
துரோகிஸ்டார்
யோகியும் அல்ல.. - அவன்
யோக்கியனும் அல்ல..
காவி தரித்திருப்பதால்
துறவியும் அல்ல - அவன்
துறந்தவனும் அல்ல..
மத அரசியல்
மாட்டு அரசியல் என
வெறுப்பு அரசியல் செய்யும்
கருப்பு அரசியல் வாதியவன்.
பாமர நெஞ்சத்தில்
பாசிச வெறியேற்றுபவன்,
பாசமுள்ள பக்கத்து வீட்டான்
முஸல்மான் என்றால்
புலிக்கு மான்
அகோர வேட்டையாடு
ஆசி உண்டென்பவன்.
அரசியல் லாபத்திற்காய்
அறமில்லா மனங்களை
அபயங் கொடுத்து வளர்ப்பவன்.
இன அழிப்பின் அட்டூழியம்
நீதி நியாயம் கேட்டால்
வீடு இடிக்க புல்டோசர் வரும்.
அன்பில்லா நெஞ்சத்தார்க்கு
ஆயுதங் கொடுத்து மனிதம் அழிப்பதா?
கேட்டுவிட்டால் எண்கவுண்டர் தான்.
சோசியல் மீடியாவில்
பாசிசம் எதிர்த்துப் பகிர்ந்தால்
போலிஸ் லாக்கப்.
மண்ணில் நடந்ததை
மாற்ற முடியாது - இஸ்லாமிய
மன்னர்கள் ஆண்டதையும்
மறுக்க முடியாது என்பதெல்லாம்
இவன் உச்சந்தலையில் நச்சரிக்கும்.
அதனால் தான்
அலாஹாபாத் உட்பட
அழகிய இஸ்லாமிய பெயர்ப் பலதை
வன்மமாய் மாற்றிப்போட்டான்.
பாலகர்கள் படிக்கும்
பள்ளி புத்தகத்தின் சரித்திரத்தில்
சுள்ளி வைத்து கொள்ளி வைத்தான்.
இதெல்லாம் நாடறிந்தது,
ஊருக்கே அயோக்கியன்
சங்கி ஸ்டாருக்கு மட்டும்
கடவுளாகத் தான் தெரிகிறானாம்.
போடும் வேடம்
ஹீரோவானாலும்,
நம் மண்ணுக்கு
வில்லன் இவன்.
அறிவாளி போல் பேசும்
கோமாளி இவன்.
ஆரிய சித்தாந்தம்
தமிழ் நாட்டில் வேர் பிடிக்க
காவிக்கு ஆள் பிடிக்கும்
கால் பிடி கபடனிவன்.
கலைஞர் முதல் அறிஞர்கள் பலர்
பக்கத்தில் இருந்தும்
மூளை வளராத முடமிவன்.
வானத்து நட்சத்திரம் போல
கொண்டாடிடும் ரசிகர்களால்
சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தும்
குப்பையில் சேரும் சருகு இவன்.
தமிழ்நாடு தலையில் வைத்துக் கொண்டாட
புல்டோசர் வாயன் காலை
உ(த்)திரப்பிரதேசத்தில் தேடி ஓடுபவன்.
நல்லவேளை துரோகிஸ்டார்
கட்சி ஆரம்பிக்கவில்லை,
பத்து பைத்தியம் இவனுக்கும்
கொடி பிடித்திருக்கும்
தமிழ் நாடு தப்பித்தது.
தூத்துக்குடி போராட்டக்காரர்களை
சமூக விரோதிகள் என்று
முதுகில் குத்தியதை ஏனோ தமிழர் மறந்தோம்.
ஆனால், ஆஸ்பத்திரியில்
போராட்ட இளைஞன் கேட்டானே
அந்த கேள்வி தான்
எல்லார் நெஞ்சிலும் இப்போது
ஆமா… யார் நீங்க?
துரோகிஸ்டார்
-ஜா.மு



