24 ஜனவரி 2023

உணர்வின் மொழி!

பார்த்த மாத்திரத்திலேயே
உணர்வுப் பொங்க வைக்கிறது
சில எழுத்துக்கள்.
படிக்கும் நிகழ்ப் பொழுதிலேயே
உருகி அழவைத்துவிடுகிறது
சில சொற்கள்.
ஆழ்ந்த சில நொடிகளிலேயே
உருக்குலைய வைக்கிறது
சில வரிகள்.
அது வெறும்
எழுத்துக்களால் ஆன
சொற்கள் என்பதைத் தாண்டி,
அவை..
உயிரைத் தோண்டிக்
கிளற.. கிளறப்
பூதம் போல வெளிப்பட்டவை,
வெறி கொண்டு
மென் உணர்வின் மீது
காழ்ப்புடன் எறியப்பட்ட
கற்களின் ரத்தம் தோய்ந்தவை,
அக்கினி மிகு
அனல் சூழ் வாழ்வில்
யாருக்கும் தெரியாமல்
எரிந்த பெருந்தீக் கருக்க,
உள்ளம் உருகப் பெருகிய
கண்ணீரினால் ஆன
உப்புக்கற்கள் அவை.
- ஜா.மு
24-01-17

கருத்துகள் இல்லை: