1
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
உலத்தில்
எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
புகழோங்கும்
இறைவனே
புகழ்ந்தேற்றும் புனிதராய்
புவிமீது தோன்றினாரே
நற்செய்தி
பகிர்ந்திடும்
நாநிலத் தூதராய்
நாயகம் தோன்றினாரே
2
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
நிலம்
அழிக்கும் பேதங்கள்
நிஜமாக நீங்கவே
நிறைநாதர் தோன்றினாரே
குலப்பெருமை
பேசியோர்
கொடுஞ்செயல்கள் ஒழியவே
குணநாதர் தோன்றினாரே
நூற்றாண்டு
காலமாய்
புதையுண்ட பெண்சிசுக்கள்
விசும்பல்களில் தோன்றினாரே..
அறியாமை
காலத்து
அநீதங்கள் பொசுங்கிடும்
நெருப்பாக தோன்றினாரே
பாலைவன
நிலத்திலே
பால்சுரக்கும் ஊற்றாக
பாசநபி தோன்றினாரே
3
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
உலத்தில்
எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
அன்பென்ற
மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
உலத்தில்
எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
- ஜா.மு
02-05-2020
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
புகழ்ந்தேற்றும் புனிதராய்
புவிமீது தோன்றினாரே
நாநிலத் தூதராய்
நாயகம் தோன்றினாரே
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
நிஜமாக நீங்கவே
நிறைநாதர் தோன்றினாரே
கொடுஞ்செயல்கள் ஒழியவே
குணநாதர் தோன்றினாரே
புதையுண்ட பெண்சிசுக்கள்
விசும்பல்களில் தோன்றினாரே..
அநீதங்கள் பொசுங்கிடும்
நெருப்பாக தோன்றினாரே
பால்சுரக்கும் ஊற்றாக
பாசநபி தோன்றினாரே
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி தோன்றினாரே..
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
02-05-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக