அடியெடுத்து வைக்கிறோம்
அருள் ரமலான் மாதத்தில்,
முடிவெடுத்திடுவோம்
அதனால் நாம் சிறப்பாக
துடிதுடிப்புடனே சோர்விலாமல்
தூயபல செயலாற்றி
படிப்படியாக பயனுளதாய்
படைத்தவனுருள் பெற்றிடுவோம்.
இடிமுழக்க திருக்குர் ஆன்
இனியமொழி தினம் இசைத்தும்
ஈடில்லா நபிமணிமேல்
இதய சோபனம் நிதம் துதித்தும்
ஓடி ஓடி தானம் செய்தும்
நாடி வருபவரை ஆதரித்தும்
விடிவெள்ளி தோன்றுவரை
விழித்திருந்து அறம்புரிந்தும்
அடிப்படையில் ஐந்தினையும்
ஆண்டவனுக்காய் தினம் காத்தும்
பிடிவாதமாய் பிறர்நலன்காத்து
பேணிடுவோம் உறவின் உயிர்காற்று
நொடிநேரமுமே சைத்தானின்
சூழ்ச்சிக் கிறையாகது இறைவா நீ காப்பாற்று!!!
என்றும் எப்போதும் நபிகள் நாயகம் திருமீதில்
இறைசாந்தி நிலவட்டுமாக. ஆமீன்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா