24 மார்ச் 2016

வழுத்தூர் ஷாஹ் முஹம்மது வலியுல்லாஹ் 2016 -ம் ஆண்டு உரூஸ்



தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெஞ்ஞானப்பெருமகான், சோழ மன்னனின் தனிமரியாதைக்குரிய ஞானியாகத்திகழ்ந்த பெருமேதை, பகுதாதிலிருந்து தென்னகம் வந்த இறைநேசர் தஞ்சை தரணியெங்கும் ஞானமணம் மணக்கவைத்த வள்ளல் நாகூர் ஷாகுல் ஹமீதரசர் அவர்கள் தங்களின் பயணத்தில் ஜியாரத் செய்து சென்ற பெருமகனார் ஹள்ரத் அஷ்ஷைகு முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உரூஸ் முபாரக் வெகு விமர்சையாக நடந்தேறியது. பெருவாரியான மக்கள் நிகழ்வில் கலந்துகொன்டு இறையருள் ஆனந்த பெருநெகிழ்வடைந்தனர். இன்று காலை ஹந்தூரி நிகழ்வும் சிறப்பாக நடந்தது.

நிகழ்வில் அருளிசை அரசு எஸ்.எம். அபுல்பரக்காத் அவர்களின் சூஃபி இஸ்லாமிய இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது குறிப்பிட தக்க செய்தி. மாஷா அல்லாஹ்.
விழா சிறக்க துணைநின்ற எல்லா அன்பர்களுக்கும் இறைவன் நிறையருள் புரிவானாக. ஆமீன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: