23 மார்ச் 2016

துபாய் காலநிலை



சூரியகிரணங்கள் பூமியில் விழாதபடி
குப்புறப்படுத்து தன் முதுகை
விரித்துத்தான் வைத்திருக்கிறாள் மேகமாது,
அவள் தளிருடலின் குளிரெழிலில்
மயங்கித்தான் கிடக்கிறோம் இன்னும்

அவள் மார்பகம் சுரந்த
பால்மழையில் நனைந்த நாங்கள்
இரண்டுவாரங்களாக மேகமோகம் தீராது
கிரங்கி சுகித்திருக்கிறோம் இதமான
அவள் மென் தீண்டல்களின் சுகானுபவத்தையும்
கதகதப்பான பாசத்தழுவல்களின் இளஞ்சூட்டையும்.

எங்கள் கவலையெல்லாம்
(முதலமைச்சர் கொடநாடு போவதைப்போல)
சிங்காரி அவள் சிகையலங்காரம் செய்ய
மாயலோகம் சென்று மயக்கும் எழில்பெற்றுவர
செலவிடும் அந்த கொடுங்கோடையின்
ஆறு மாதத்தைப் பற்றித்தான்…
கதி அதோகதி தான் அவளில்லாமல்.

8.03 காலை 23-3-16

தமிழகத்தில் வெயில் வாட்டி வதம் செய்யும் நேரத்தில், அமீரகத்தின் காலநிலை இன்னும் இதமாகவே இருக்கிறது, இன்னும் சில நாட்களில் கோடை ஆரம்பித்து அதன் கோபம் காட்டும்.


- வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



கருத்துகள் இல்லை: