16 மார்ச் 2016

பிறந்த நன்னாள்



இன்று உன் பிறந்த நன்னாள்

வாழ்க என்று
பிரித்துச் சொல்வதற்கு கூட
மனம் இல்லை
நாம் தான் ஒன்றோடொன்றாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறோமே!

எப்போதும்
கூடி மகிழ்வோம்
பாடித்திரிவோம்

சூழ்நிலைகளில்
சேர்ந்தே அழுவோம்
சோர்ந்தே விழுவோம்

கோபம் வந்தால்
திட்டிக்கொள்வோம்
முட்டிக்கொள்வோம் - பின்பு
கட்டிக் கொள்வோம்

சண்டை இடுவோம்
பேசாதிருப்போம்
வெறுப்பது போல்கூட
இருப்போம்
ஆனால் அடுத்த கணம்
நீயன்றி யாருள்ளார்
எனக்கிங்கு என்றே
அன்பைப் பொழிவோம்
ஆறுதல் பெறுவோம்.

அன்பே.....

இதயத்தின் பலம் நீ
கண்களின் ஒளி நீ
செவியின் ஒலி நீ
மூச்சு நீ என் பேச்சு நீ
உணர்வு நீ
உணவும் நீ

இரவிலும் நீ பகலிலும் நீ
நினைவிலும் நீ நனவிலும் நீ
அண்மையில் நீ தூரத்தில் நீ
நினைவில் நீ நனவினில் நீ

வார்த்தைகள் எல்லாம் இல்லை
இன்றுனை வாழ்த்த..
நீயே என் வாழ்வானாய்.
வாழ்க என் வாழ்வே!
வருவாய் என்னோடு என்றும் என் மகிழ்வே!.

- அன்போடு உன் நான்.


( என் பெருந்துணைக்காய் சென்ற பிறந்தநாளில் எழுதியது)

 ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: