07 மார்ச் 2016

அகதியின் சாவு


ஒரு அதிகாரியின் வன்மம் தெரிய
ஒரு உயிர் பலியாகவேண்டி இருக்கிறது
இன்னும் அதிகாரத்தின்
குரூரத்தின் பிடியில் சிக்குண்டு
உயிர் மட்டும் பலியாகாது
உயிர் பதைத்து நிதம்சாகும்
உயிர்கள் நிறைய என்பதை
நிரூபணம் செய்கிறது
நிகழ்ந்திட்ட சம்பவம்.
ஒன்றுமற்றவர்கள்
அடைக்கப்பட்டிருப்பது
வலிமைவாய்ந்த
பல சுற்று மதில்*களுக்கு
உள்ளே என்பதால்
உலகத்தின் பார்வை படுவது
இதுபோன்ற நிகழ்வுகளில் தான்.
அதிகாரத்தை
நிராயுதமாக எதிர்க்க
அவருக்கு தெரிந்த ஆயுதம்
அவருக்கு கிடைத்த ஆயுதம்
உயிர் மட்டும் தான்
"அகதிகள் தானே" என
இழிநிலையோடு நடத்தும் சுபாவம்
இனஅழிப்பை விட கொடூரம்
தமிழன் எனும் போர்வையில்
எண்ணற்ற ஓணாய்கள்
ஒளிந்துகொண்டு ரத்தம் குடிப்பற்கு
இதைவிட
வேறென்ன சான்றுவேண்டும்!
மதில் - அதிகாரம் சுமந்தவர்கள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: