16 மார்ச் 2016

விலையுர்ந்த எழுதுகோல்!



அது ஓர் விலையுர்ந்த எழுதுகோல்!
மனங்கவர் வண்ணம்,
அத்தனை வசதி அதில் எழுத,
கம்பீரம் மினுங்கும்
சட்டைப்பையில் சொருகியிருந்தாலே,
விரல்பிடித்து எழுதினால் வீசும் பெருமை,
பல முக்கிய கையெழுத்தெல்லாம் அதில் தான்
மை தீர்ந்து போனது,
.
.
.
பின்னாளில்
கைகளும் தேடா அது
அள்ளப்படுகிறது, 

குப்பைகளோடு சேர்த்து .

*****

இறுகிய மனம் 
எழுத மறுக்கிறது
கவிதை.


*****


மதவாதப்பேய்கள் நடத்திய
ஊர்வலத்தில்
கலவரத்தை அடக்கிய
காவலரின் குதிரைக்கால்கள்
முறிக்கப்படுகிறது
மேனகாக்கள் மெளனம் காக்கிறார்கள்.


‪#‎உத்ரக்காண்ட்‬ பாஜக பேரணி கலவரம்
*****

போகிற போக்கில் 
எதிர்படும் தூசுகள் போலத்தான்
யாருக்கோ நேர்திட்டதாய்
கவனத்திற்கு வந்திடும்
எல்லா பெருஞ்சோகங்களும்,
அந்த முள் நம்மை தைக்காதவரை.




-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: