29 மார்ச் 2016

வலிகள் தந்த வழி

ஒளியில்லாத காடாய்
கூரான கற்களும்
உடைபட்ட சிற்களும் தான்
வெளியெங்கும் விரித்து
எழுதப்பட்டிருந்தது முகவரியென,
பெரும் பாடாய்
அனுமானத்தின் பலத்தோடு
வந்த அச்சத்தினை
வழிமுனையே விட்டுவிட்டு
தத்தித் தயங்கித் தடுமாறி பின்
ஒருவழியாய் நினைத்த இடம் வந்தவுடன்
நிம்மதிப் பெருமூச்சு விட்டோமே
முதன்முறை,
அந்தவழியா...!!!
இப்போது பழக்கமாகி
வெகுசரளமாய் வழக்கமாக
பயணிக்கும் இந்தவழி???
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: