14 மார்ச் 2016

சாதிய கொலை


எவன் கொணர்ந்தான்
இந்த வர்ணங்களை..
எவ்வளவு கழுவினாலும்
போகாமல்
திமிறுடன் உயிர் திண்று 
உயிர்பெறுகிறது..?

தன்மான பெரியாரின்
தடிகளை பிடுங்கி
எரியும் தீயில் இட்ட
அரசியல் வாதிகளால்
இன்னும் சுடர்விட்டு
எரியும் தீயில்
சாம்பலாகிறார்கள்
கீழ்த்தளத்தில் உள்ளோர்.

வறியவர்களுக்கு
உயிரும் உணர்ச்சிகளும் இருப்பதையே
ஏற்றுக்கொள்ள முடியாத
அடிப்படை அறிவில்லாத
தரந்தாழ்ந்த சமூகம்
தங்களை தாங்களே
உயர்வானவர்களென்று
பிதற்றி நாற்றம் பரப்புகிறது

எவ்வளவோ தத்துவம் பேசிய தமிழனே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவனே
திருக்குறள் என் வேதம் என மார்தட்டியவனே
ஒப்பற்ற சித்தாந்தம் எமதென நெஞ்சு புடைத்தவனே

இவையணைத்தும் எடுத்துச்சொல்லியுமா
இன்னும் நீ சாதி இழிவைச்சுமக்கிறாய்

உலகையே கைக்குள் கொண்டுவரும்
கணிணி யுகத்திலும் சாதியை நம்பினால்
உன்னைப்போலொரு சண்டாளன் வேறில்லை

உன்னுள் பெரியாரை
மீண்டும் உயிர்த்தெழவை

சார்பற்ற சிந்தனைக்கு கூர்தீட்டு

கொஞ்சமாவது
உயிர் கொண்டு திரிவதை
ஊர்ஜீதமாக்கு.

இளைஞர்களே சிந்திப்பீர்
தீய சாதியத்தை ஒழிப்பீர்.

உடுமலைப்பேட்டை தலித் தம்பதியினர் பட்டப்பகலில் ரவுடிகளால் வெறித்தனமாக வெட்டப்பட்ட சம்பவம் தமிழர்கள் அனைவரையும் வெக்கித் தலைகுனிய செய்திருக்கிறது.

****

மகனுக்கு ஆட்சி பெரிது
அரசியல் சூழ்ச்சி பெரிது
இவ்ளோ நேரம்
முக்கியமான செய்தி சொல்லிருக்கேனே
அதப்போடுங்க!
இறந்தவன் உயிர் பெரிதல்ல.


****
அரசியல் முகமூடி இருப்பதால்
ஒவ்வொருமுறையும் ஜெயிக்கிறது
ரவுடிகளின் ரத்தம் தோய்ந்த அறுவாள்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

வேகநரி சொன்னது…

நல்ல பதிவு.