12 டிசம்பர் 2014

லிங்கா - எப்படி இருக்கு - விமர்சனம்



மகாகனம் பொருந்திய ராஜா லிங்கேஸ்வரரை நேற்று தரிசிக்கும் பாக்கியம்!? பெற்றோம்…(அடிக்க வராதிங்கப்பா.. லொல்லுக்கு தான்) படத்தில் ரஜினி அறிமுகமாகும் முதல் சீன் துபாயில், அங்கு சாதாரணமாக இருக்கும் மிக விலையுயர்ந்த காரில் வந்து இறங்குகிறார் .. பிறகு அறிமுகப்பாடல்.. துபாய் அபுதாபி என கிளுகிளுப்பாக சூப்பர் பாடல் நன்றாக உழைத்திருக்கிறார்கள். துபாயில் குவிந்திருக்கும் பெல்லி டான்சர்ஸ், மாடல் அழகிகள், துருக்கிய தனோரா ஆட்டம், ஸ்டேடியங்கள் மற்றும் பெரும் பெரும்பார்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி ரகளை கட்டி இருக்கிறார்கள். அப்போது தான் நம் SAC ஹமீது அவர்கள் கூட அபுதாபியில் ரஜினியை சந்தித்து எடுத்து போட்ட போட்டோ நினைவில் வந்தது.

ரஜினியை மிக இளமையாக காட்டி இருக்கிறார்கள்.. 65 வயதுக்காரரா! அப்படி என யாரும் சொல்லிவிடமுடியாது ஏன்ன்னா மைதா.. ரவை.. கடலைமாவு, ரப்பர் என எல்லா ரசவாத கலவையையும் திறம்பட கலந்து ஒட்டிய ஒப்பனை கலைஞர்கள் பாராட்டுக்குறியவர்கள். இளமையா ரஜினி வர்ரப்ப சும்மா அதிருது..!

படஆரம்பத்திலிருந்து பேரன் ரஜினியின் முதல் ஆஃப் காமெடி கலாட்டாவாய்.. அனுஷ்கா, சந்தானம், தாடி பாலாஜி என பலரோடு ஜாலியாய் நகர்கிறது. பிளாஸ்பேக் ரஜினியை காட்டும் ரயிலும், ரயில் சண்டையும் அருமை, திகில் கிளப்பும் படி தத்ரூபமான கிராபிக்ஸ். அதிலும் ரஜினி பட்டையை கிளப்பும் ஸ்டைலோடு விலாசுகிறார் பழைய கால ரஜினியாய்.


கலெக்டர் கதாபத்திரம், ஆங்கிலேயர்களுடன் மோதல் எல்லாம் விறுவிறுப்பு… மைசூர் அரண்மனையை அழகாக காட்டி இருக்கிறார்கள் அதில் ஆங்கிலேயர்களுக்கும், மற்ற அரசர்களுக்கும் நடக்கும் விருந்து காட்சி மிக அருமை அதிலும் விருந்து பறிமாறப்படும் நேரம் வரும் பின்னணியில் மேற்கத்திய இசையை ரம்மியமாக பிண்ணி இருக்கிறார் ரஹ்மான். படத்தின் ஆரம்பத்தில் அரசியல் பஞ்ச், பிறகு படத்தின் இரண்டாம் பகுதியில் ஆன்மீக மணம் என வழக்கமான ரஜினிபட பாணியில் எல்லாம் கலந்து கொடுத்திருக்கிறார்கள். பல வசனங்களுக்கு அரங்கம் அதிர்கிறது. “எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கடைசியில் மனுசனின் உயரத்துக்கு தான் தூங்க இடம்” என்றெல்லாம் பேசும் போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இதிலும் ஒரு பாம்பு சென்டிமென்ட் காமெடி காட்சி இருக்கிறது.

நெருடல் என்னவென்றால்  ஆங்கிலேயர்கள் போட்ட ரயில்ப்பாதைகள் எல்லாம் இந்திய வளங்களைக் கொள்ளை அடிக்கத்தான் அதில் லாபம் அடையலாம் என்றும் தான் போட்டதாகவும், மலைப்பகுதிகளில் சாலை அமைத்தது எல்லாம் உல்லாசப்பயணம் சென்று அவர்கள் அனுபவிக்கத்தான் என்றெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஏகப்பட்ட வசனம் பேசும் ரஜினி என்ற லிங்கேஸ்வரன் சோலையூர் மக்களின் துன்பம் துடைக்க ஆங்கிலேய சூழ்ச்சிக்கு இடையே அவர்களிடம் தனது கலெக்டர் பதவி, அரசாட்சி, அரச ஆடம்பர அரண்மனை, பொன், பொருள் என எல்லாவற்றையும் இழந்து அணை கட்டிக்கொடுப்பதாகவும் கடைசியில் அந்த அணையை தாங்கள் தான் கட்டினோம் என போடச்சொல்லி ஆங்கிலேயர் மிரட்ட மக்களுக்காக அப்படியே செய்ய சம்மதிக்கிறார் ரஜினி (படத்தில் கடைசியில் ஆங்கிலேயனே ரஜினி கட்டியதாய் திறந்து வைக்கும் திருப்பம் வேறு) இதுவெல்லாம் பெண்ணி குயிக் என்ற ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்த முல்லைப் பெரியாறு அணையை யாபகப்படுத்தாமல் இல்லை, மறைமுகமாக அப்போது ஆண்ட அரசர் கட்டிய அணையை ஆங்கிலேய பெண்ணிகுயிக் மிரட்டி தனது பெயரை போட்டதாக சொல்லப்படுவது அபத்தமாக தோன்றுகிறது, வரலாறு ஒன்று சொல்ல சினிமாவில் உல்டாவாக ரஜினிக்காக காட்டுகிறார்கள்.’ படத்தின் அடுத்தடுத்த காட்சியில் அணையின் தரம் குறித்து சோதனை இட வரும் அதிகாரியிடம் ரஜினி இது ஆயிரம் வருசத்திற்கு உறுதியாக நிற்கும் என்கிறார். படம் பார்க்க வந்த மலையாளிகள் சலசலக்கிறார்கள். கேரளாவில் இதற்கு என்ன ரியாக்சன் என தெரியவில்லை.

அணை கட்டும் காட்சிகளும், அதை தடுக்க சில எட்டப்ப வேலை செய்யும் சுந்தர்ராஜன் கேரக்டரும் அருமை. பின்னனி இசை படமுழுக்க பிரமாதம். பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் படத்தோடு பார்க்க அருமை. ரஹ்மானின் உழைப்பு தெரிகிறது. 


இரண்டாம் பகுதியில் குறிப்பாக கிளைமாக்ஸ் எதிர்பார்ப்போடு இல்லை, ஜவ்வு போலவும் இழுக்கிறது. ரஜினி மலையிலிருந்து குதித்து எங்கோ மிக தூரத்தில் இருக்கும் பாராசூட்டில் பறந்து வந்து அலேக்காக விழுவதும், அதில் சூப்பர் மேனை விஞ்சி சண்டையிடுவது கொஞ்சம் ரஜினி படம் என்றாலும் நம்பமுடியாத ஓவர் டோஸ். பிறகு வில்லனை வீழ்த்தி, பாம் வெடிக்காமல் செய்து அனுஷ்காவை அணைத்துக்கொண்டே காப்பாற்றி வெற்றி பெருவது பல லட்சம் தமிழ் படங்களில் எம்,ஜி.ஆர் காலத்திலிருந்து இன்று வரை பார்த்த காட்சிகள் தான். இதுவெல்லாம்  ரவிக்குமார் இன்னும் சரிபடுத்தி இருக்க வேண்டும். இருந்தாலும் ரவிக்குமார் முத்திரை இதிலும் இருக்கிறது. பழைய ரஜினி டீமின் பலரை இதிலும் பார்க்கலாம். சரத்பாபு இருந்திருந்தால் அந்த குறை இன்னும் தீர்ந்திருக்கும்.


சாக கிடந்த ரஜினியை இப்படி இன்னும் துள்ளலோடு பார்ப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அப்படி காட்டி இருக்கிறார் ரவிக்குமார்.. அப்படி ஒத்துழைத்திருக்கிறார் ரஜினி. ஒளிப்பதிவும் அருமை. நாயகிகள் அனுஷ்காவுக்கு வயது 35 என்றால் யாரும் நம்பமாட்டார்கள், சோனாக்‌ஷியும் முதல்மரியாதை ராதா போல் வந்து அசத்துகிரார். ரசிகர்கள் வாயை பிளக்கிறார்கள். 


எனக்கெல்லாம் இன்று பார்க்கும் திட்டமே இல்லை.. சாப்பிட வெளியே கிளம்பினேன் டிக்கெட் வாங்கியாச்சா.. என எல்லோரிடமும் பேச்சு.. நான் சார்ஜா போய் பார்க்கபோகிறேன்.. என்றார் ஒருவர் இன்னொருவர் நான் அஜ்மானிலேயே தான் பார்க்க வேண்டும் என்றார். இங்கு ஓடவில்லை என நினைத்த நான் உடன் ஓட்டம் எடுத்தேன். அதே பரபரப்புடன் ரசிகர்கள்.. கொண்டாட்டம்.. இரவு 12 மணிக்கு மேல் தான் படம் என்றாலும் குழந்தைகளோடு தாய்மார்கள் என களைகட்டியது. இதில் துபை, சார்ஜா, அபுதாபி என திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை நணபர்கள் அனுப்பிய க்ளிப்ஸ் மூலம் தெரிய நேர்ந்தது. வடநாட்டுக்காரர்கள் ஏன் அரபிய இளைஞர்கள் கூட எங்களோடு படம் பார்த்தார்கள்.. எந்த ஷோவிலும் நடக்காத விசில் மற்றும் ரகளை இவர்களுக்கு பிரமிப்பாக இருந்திருக்கும். வந்தவர்களை திரையரங்க ஊழியராக நின்றிருந்த பிலிப்பினோ என் தம்பியிடம் வந்திருக்கும் மக்களை எப்படி தமிழில் வரவேற்பது என கேட்டு.. எல்லோரையும் வணக்கம் ரஜினியின் தமிழ் படம் ஆரம்பமாக இருக்கிறது வாருங்கள் என வரவேற்க எல்லோரும் சிரித்து மகிழ்வோடு அரங்கிம் நுழைந்தது கூடுதல் தகவல்.

ரஜினி படத்தை எதிர்பார்த்தவர்கள் ஏமாற மாட்டார்கள்.. ரசிகர்கள், பெண்கள், குழந்தைகளை இப்படம் அள்ளும்.. வசூலிலும் சாதனை செய்து வெல்லும்.
ஜாலியா போய் பாக்கலாம். பாருங்கள் என்பது என் சைட்.

ரஜினி ராக்ஸ்..! 
 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

4 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

ரஜினி படம் என்றால் கேட்கவா வேண்டும், ரஜினி இந்த படத்தில் அசத்தியிருப்பதாக நீங்கள் சொல்லியிருப்பது படம் நனறாக இருக்கும் என்று தோன்றுகிறது.

dheva சொன்னது…

அட்டகாசமான, கனகச்சிதமான விமர்சனம் பாட்சா....!

மிகவும் ரசித்து வாசித்தேன்...!

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

நன்றி தேவா

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

நன்றி கும்மாச்சி