04 டிசம்பர் 2014

43 வது அமீரக தேசியதின முகநூல் பதிவுகள்


அமீரகம் ஒரு அற்புத உலகம் - பலநூறு
சமூகம் இணைந்து கமழும் நறுமண திலகம்
( அமீரகத்தில் 186க்கும் மேற்பட்ட நாட்டினர் ஒன்றாக அமைதியுடனும் செழிப்புடனும் வாழ்கின்றனர் )
*
பசுமைகள் அலங்கரிக்கும் பாலைப்பதுமை 
பார்வைகள் மயங்கும் உலகின் புதுமை 
அமீரகம்
*
சுவரொட்டிகள் இல்லாத சுந்தர தேசம்
சுவாசமெங்கும் சுகவாசம் வீசும் தேசம்
அமீரகம்
*
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல..
இந்துக்களுக்கு கோயில், கிருத்துவர்களுக்கு சர்ச் என எல்லோருக்கும் செய்து கொடுக்கிறது துபை அரசாங்கம்.
பர்துபையின் கோயிலில் வார விடுமுறையில் பார்த்தால் இந்திய தேசத்தின் எல்லா பகுதியிலிருந்தும் வரும் இந்துப் பெருமக்களை பார்க்கலாம்.. அவர்களின் வழிபாட்டுக்காக எல்லா இந்து தெய்வ கோயில்களும் இருக்கிறது.. கோயில் நடையில் பூஜைக்கான பொருட்கள், பூ என எல்லாமே கிடைக்கும். இங்கு மட்டும் தான் கோயிலுக்கு மிக அருகே பள்ளிவாசல் இருந்தும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக நேசத்தோடு அவரவர் வழிபாட்டை அவரவர் செய்து மனம் நிறைகிறார்கள். (இந்தியாவை நினைக்க மனம் நோகத்தான் செய்கிறது.. அதுவும் அரசியலுக்காக மததுவேச அரசியல்..!!!!!)
ஊத்மேத்தா பகுதில் சனி ஞாயிறு கிழமைகளில் பார்த்தால் நெருங்கவே முடியாத அளவுக்கு உலகளாவிய நாடுகளைச் சார்ந்த கிருத்துவர்கள் கூட்டம் அலை மோதும்.. கூட்டத்தையும் போக்குவரத்தையும் சரிப்படுத்த காவலர்கள் மிக ஒத்துழைப்பு கொடுத்து சரிசெய்யும் காட்சியை அனைவரும் காண்பர்.

இது தான் அமீரகம்.
*
ஒரு கன்னிப்பெண் உடலெங்கும் தங்க ஆபரணம் அணிந்து நடுநிசியில் பயமறியாமல் பாதுகாப்புடன் என்று பயணம் செய்யும் நாளோ அது தான் நம் நாட்டிற்கு உண்மையான சுதந்திர நாள் என்று கனவு கண்டார் நமது தேசத்தந்தை காந்திஜி.. ஆனால் அந்தக் கனவை நாளும் பொழுதும் நனவாக்கி பெண்கள் எந்த நடுநிசியிலும்.. எந்த துணையும் தேவையென அறியாது அல்லது நாடாது அவர்களே தன் சொந்த வீடு போல நினைத்து வலம் வரும் ஒரு நாட்டை தினமும் பார்க்கிறோம் என்றால் அது அமீரகம் தான். அமீரகத்தில் தனிமனித பாதுகாப்பும், பெண்களுக்கான பாதுகாப்பும் நிறைந்திருப்பதால் ஆசிய ஐரோப்பிய மக்கள் தங்களின் வாழும் நாடாக பாதுகாப்பு அரணான அமீரகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு இங்கு வாழும் ஒவ்வொருவருமே சாட்சி தான்.

இது தான் அமீரகம்.

*
உங்களுக்கு தெரியுமா அமீரகத்தில் 1965 வரை இந்திய நாணயங்கள் தான் புழக்கத்தில் இருந்தது அப்படியான நாட்டின் ஒரு அங்கமான துபை இன்று ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளீல் அசுர வளர்ச்சி அடைந்து நிற்கிறது என்றால் அது அந்த நாட்டை வழி நடத்தும் திறமையான ஆட்சியாளர்களைத் தான் சாரும். எல்லோரும் நினைப்பது போல திரைப்படங்களில் வசனம் பேசுவது போல துபாயில் பெட்ரோல் எண்ணை வளம் அறவே இல்லை... துபாய் என்ற நாட்டை வளர்த்தெடுக்க மிக அற்புதமாக திட்டமிட்டு அதை சர்வ தேச சந்தையாக்கி... எல்லோரும் தொழில் தொடங்க வேண்டிய கட்டமைப்பை செய்து கொடுத்து, பாதுகாப்பை மிக உறுதிப்படுத்தி... சுற்றுலா துறையை சீர்மை படுத்தி ஒரு வளமும் இல்லாத இந்த நாட்டை உலகின் எல்லா வளமும் வந்தடையும் நாடாக்கி இருக்கிறார்கள். இங்கு வந்து சேர்ந்தால் போதும் பணம் பண்ண தெரிந்தவர்கள் அள்ளும் அளவுக்கு அள்ளலாம் என்கிற நிலையை உருவாக்கி அவர்களும் சிறந்து வாழ்கிறார்கள். இங்கு இருப்பவர்களும் மனமகிழ்ந்து வாழ்கிறார்கள். இது தான் துபை.. இது தான் அமீரகம்.
(பெட்ரோல் அபுதாபியில் மட்டும் தான். துபை அமீரகத்தின் ஒரு பாகமாக இருந்தாலும் இங்கே தனித்தனி நிர்வாகம் தான். இராண்டுகளாகத்தான் நம் நாட்டின் மத்திய அரசு போல ஒரு சில விசயங்களில் அவர்கள் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்)

இது தான் அமீரகம்.
*

அமீரகத்தில் இது தான் இல்லை
*******************************************
இல்லை என்பதெல்லாம்....
காணும் இடமெல்லாம் கட்சிக்கொடிகள் இல்லை
தேனும் தினைமாவும் கலந்து பேசும் 
அரசியல் வியாதிகள் இல்லை
தாரத்தப்பட்டையோடு தலைவர்கள் உலா இல்லை
தன்மானம் கெட்டாலும் தலைவர் வருகிறார் என்ற விழா இல்லை
பாலம் கட்டி அற்பணிப்பு விழா இல்லை
நிர்வாக சீர்கேடு இல்லை
நிவாரண கொள்ளை இல்லை
வெற்று வாக்குறுதிகள் இல்லை
ஓட்டுப்பொறுக்கிகள் இல்லை
வெற்று கோஷம் இல்லை
வீண் விவாதங்கள் இல்லை
அதனால்
தந்தி டிவி பாண்டே...
புதிய தலைமுறை அக்னிப்பரிட்ஷை..
இவைகளெல்லாம்
இங்கே தேவை இல்லை..!!!
*
துபை ஈமான் அமைப்பின் 43வது அமீரக தேசிய தினம்
முகநூல் இணைப்பு...
*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: