14 டிசம்பர் 2014

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு

அன்பு முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
சில வருடங்களாக  ஒவ்வொரு முறை சென்னை புத்தக கண்காட்சியைப்  பார்க்க போகும் போதும்  எனக்குள் நமது முஸ்லிம் லீக் சம்பந்தமான புத்தகங்கள், காயிதேமில்லத் தொடர்பான வரலாற்று நூல்கள், மணிச்சுடரில் வெளியாகிய நமது சிந்தனைச் செல்வர் அப்துஸ் ஸமது ஸாஹிப் அவர்களின் முத்துப்போன்ற எழுத்துக்கள் மற்றும் கருத்துக்களை சுமந்து நிற்கும் கட்டுரைகள், இன்றுவரை இடைவிடாது எழுதிவரும் நமது அரசியல் சூஃபி.. வாழும் காயிதேமில்லத் கண்ணியமிகு கே.எம்.காதர் முகைதீன் ஸாஹிப் அவர்களின் எழுத்தாக்கங்கள், நமது முன்னால்  சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களையும், முஸ்லிம் லீக் வரலாறுகள், சாதனைகள் இவற்றில் ஏதேனும் சிலவாவது கிடைக்குமா என்று தேடிப் பார்ப்பேன் அப்படி தேடிடும் மனதிற்கு எப்போதும் ஏமாற்றமே இருக்கும்.

ஆனால் மறுமுனையிலோ சில பல மற்றைய இஸ்லாமிய இயக்கத்தவர்கள் அவர்களின் நூற்களை சந்தைப்படுத்துவதை தவறுவதே இல்லை…வந்து போகும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கெல்லாம் பல இலவச புத்தகங்கள் கூட வினியோகிப்பார்கள் அவ்வியக்கங்களினால் சமூகத்தில் எப்படியான விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். சென்ற முறை நடந்த புத்தக கண்காட்சியில் பார்க்க வரும் ஆயிரக்கணக்கான இந்து பெருமக்களுக்கு அவர்களே தேடி படிக்க முனைந்தாலும் நபிகள் நாயகத்தின் வரலாறு என சுற்றிச் சுற்றிப் பார்த்த வகையில் ஒன்று கூட இல்லை என்கிற நிலை தான்.. கிழக்கு பதிப்பத்தின் சார்பில் ஒரு இந்து ஆசிரியர் எழுதிய நபிகள் நாயகம் வரலாறு தான் விற்றுத் தீர்ந்தது. இதெலலம் தகவலுக்காக. நீங்களும் அறிந்திருக்கலாம்.


இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்  சென்னை புத்தகக் கண்காட்சி என்பது நமது பிராந்தியத்தில் நடக்கும் மிகப் பெரிய புத்தகக்கண்காட்சி… ஏராளமான பதிப்பகங்கள் பங்கு கொண்டு மக்களிடம் தங்களின் பதிவுகளை எடுத்துச் சென்று ஒன்று லாபம் ஈட்டுகின்றனர் மற்றொன்று கருத்துக்களை சேர்ப்பிக்கின்றனர். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரும் நலம் விளையும், தவறான அபிப்ராயங்கள் கொண்டிருக்கும் இந்துக்களும் ஏன் இஸ்லாமியர்களும் குறிப்பாக இளைஞர்களும் நமது தரப்பு உண்மைகளை உணரவாய்ப்பிருக்கிறது. களப்பணியாற்றிட நமது இளைஞர் பட்டாளங்கள் இருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது உள்ளக்கிடக்கை.

ஒரு கடை தான் எடுத்து செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூட இல்லை, வேறு கடையோடு நமக்கு ஒத்துப்போகிறவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கூட நமது ஆக்கங்களைக்கூட வைக்கலாம். உதாரணமாக உலக அளவில் இரண்டாவது பெரிய புத்தக கண்காட்சியாக நடக்கும் ஷார்ஜா கண்காட்சியில் நிறைய மலையாளப் பதிப்பகங்கள் கலந்து கொண்டாலும் ஒரு தமிழ் பதிப்பகமோ அல்லது கடையோ இல்லை ஆனால் விடியல் வெள்ளி தரப்பினர் மட்டும் தான் தேஜஸ் என்ற மலையாள பதிப்பகத்தோடு பேசி பல வருடங்களாக அவர் தம் தமிழ் படைப்புக்களை சந்தைப்படுத்துகின்றனர். சார்ஜா கண்காட்சியில் இருக்கும் ஒரே தமிழ் கடை அது மட்டும் தான். இது போல கூட நாம் சென்னை கண்காட்சியில் முயன்று பார்க்கலாம். (சென்னைத்  தவிர கோவை, ஈரோடு,மதுரை என நடந்தாலும் நாம் குறைந்த பட்சம் இப்போது சென்னை புத்தக கண்காட்சியை முதற்கட்டமாக நாம் பயன்படுத்திக் கொண்டால் நலம்).

மேற்கண்டவைகள் எனது உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்தவைகள். வரும் 2015க்கான புத்தகக் கண்காட்சி சனவரி 9 முதல் 21 வரை அதே ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்த முறை நாம் கொஞ்சமேனும் முயன்றால் நலம். பிறகு நமது தரப்பின் அணுகுமுறையை அல்லது சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளாம் என்பது என் பணிவான கருத்து.


அன்புடன்
வழுத்தூர் ஜா.முஹையத்தின் பாட்ஷா.
13-12-14


________________________________________________

2014-12-15 20:09 GMT+04:00 abdul rahman <rahmanexec@yahoo.com>:
Thambi,

Assalaamu Alaikum Warahmathullah ....
I agree with all your points. We have to initiate such tasks. All your points of the text have explored your unique spirit  you possess with Muslim League and our leaders. Fine. Insha Allah your email will definitely open the eyes of all concerned and we shall act accordingly.
Thanks.

Abdul Rahman

________________________________________________

Respected Annan, 

Assalamu Alaikkum.

I have received your great response for the mentioned subject with the delighted heart. As you said if we do some initiative actions upon this regards there will be a very much effective and useful result for our moment and the society as well. What I written in that letter is all my heart feelings only.We hope tomorrow will be a bright day for us by the gracious of almighty. 

We are very much lucky people because we have got great leaders such like your good selves. Alhamdulillah.

May god bless for all of us.

-- 

Regards and Dua's
J.Mohaideen Batcha

கருத்துகள் இல்லை: