06 டிசம்பர் 2014

இரு அவமானங்கள்

சுதந்திர இந்தியாவின் இரண்டு அவமானங்களுமே ஒரு சாராரால் தான் நிகழ்த்தப்பட்டது..
1. தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொலை
2. பாபரி மஸ்ஜித் தகர்ப்பு
எதற்காக இந்த இரண்டையும் செய்தார்களோ அதை இன்று சாதித்து அனுபவிக்கிறார்கள். பிரித்தால் தானே ஆளமுடியும்.. என்ற ஆங்கிலேய சூழ்ச்சியை கையிலெடுத்து அவர்கள் ஆட்சியை பிடித்தது போலவே இன்று இவர்கள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.
தேசத்தின் தந்தையாய் நின்று சமூகங்களை ஒருக்கிணைத்ததினால்.. இந்துக்களும் இஸ்லாமியர்களும் நேசபாசத்தோடு இணைந்து செயலாற்ற வேண்டும் என்றதினால்.. சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக நின்றதினால் . இவர் இன்னும் இருந்தால் இரு சமூகங்களின் ஒற்றுமைக்கான வழிகளை செய்து இன்னும் இறுக்கமாகிவிட்டால் நாம் பிழைப்பு செய்ய முடியாது என்றே பல சத்திய சோதனைகளை கடந்த அஹிம்சைக் கிழவனை இரக்கமே இல்லாமல் கொன்று போட்டார்கள். (இருநூறாண்டு ஆண்ட ஆங்கிலேயர்களையே எதிர்த்து பிரதான எதிரியாக செயல்பட்டும் காந்திஜி ஆங்கிலேயர்களால் கொல்லப்படவில்லை மாறாக அவனே வியந்து அவருக்கான மரியாதை தரப்பட்டு கண்ணியம் காக்கப்பட்டது ஆனால் விடுதலை கொடுக்கப்பட்ட மறுகணமே விரோதிகள் மகாத்மாவின் உயிர் பிரிக்கப்பட்டது) .
இத்தனை செய்தும் கூட இன்னும் நாம் அரியணை ஏற முடியவில்லையே கால ஓட்டத்தில் இரு சமூகங்களும் இணைந்துவிட்டனரே... எதை கையில் எடுக்கலாம்.. ஆமாம் நமக்கு தான் இருக்கிறதே பழைய யுக்தி.. பிரி...பிறகு ஆளலாம் என்றே பிரிக்கும் ஆயுதத்தை தேடினர்.. மதம் வந்து கை கொடுத்தது.. ராமனின் பிறப்பு என்ற வில்லேந்தி சமூகநீதி, சகோதரத்துவம், சமயசார்பின்மை இவைகளின் நெஞ்சில் குத்தி சிதைத்தனர்... பாபரி வீழ்ந்தது அத்தோடு இந்திய கவுரவம்... பழம் பெருமை.. ஒற்றுமை இவைகளும் தான்.
ஆட்சியும் வந்தது... காட்சியும் தந்தது... ஆனாலும் ராமன் நிச்சயாமாக பெரும்பான்மையினரின் நம்பிக்கை அடிப்படையில் நீதியின் பக்கம் நிற்கும் உத்தமன் தான் என்றால் நீதி ஒரு நாள் வெல்லும்.. அன்று அவனது வில்லே எனக்காகவா இத்தனை ரத்தக்கலரிகளை செய்தீர்கள் என்று வினவி ஈனப்பிறவிகளின் அதமர்மத்தை கொல்லும் இதெயெல்லாம் வருங்கால சரிதம் சொல்லும்.
குறிப்பு: எழுத்தின் சாரத்தை மட்டும் புரிந்து கொண்டால் நலம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: