26 டிசம்பர் 2014

தாஜ்பாய் மறைந்தார்

எங்கள் ஊர் வழுத்தூரைச் சார்ந்த சாந்தமான மனிதர்.. மிகச்சிறந்த மனிதநேயர், காயிதேமில்லத் பாசறையாம் முஸ்லிம் லீக் இயக்கப் பற்றாளர் தாஜ்பாய் இன்று மறைந்துவிட்டாராம். மாலை (25-12-2014) செய்தி வந்தது. புகைப்படம் தேடினேன் கிடைக்கவில்லை.
ஐந்து வேலைத் தொழுகையை மிக நியமமாக நிறைவேற்றியவர். குறிப்பாக அதிகாலை பஜ்ருத் தொழுகக்கு எந்தக் குளிர்க்காலமாக இருந்தாலும் முதல் சப்'பில் (வரிசை) அவரைப் பார்க்கலாம். தொழுது முடித்து அதிகாலையிலேயே ஆற்றைக்கடந்து அக்கரைக்கு சென்று நாள் முழுவதும் உழைத்து பிறகு ஆற்றைக்கடந்து மாலை வீடு எய்தும் மகத்தான உழைப்பாளி. அவர் தனது உழைப்பை தான் முதுமை அடைந்தபோதும் கூட நிறுத்தியவர் அல்ல, மிக எதார்த்தமனவர்.
நபிகள் நாயகத்தின் மீதும், ஞானமகான்கள் மீதும் அளப்பறிய நேசம் கொண்டவர். எங்கள் ஊரின் மரபின் விழுமியங்களை தனது வளைந்த முதுகில் சுமந்து திரிந்த பெரிய மனிதர். அவர் மறைந்ததது ஈடுசெய்ய முடியாத இழப்பே.
அவர் வாழ்க. அவர் ஆன்மா நிறைவில் ஆழ்க.

முகநூல் பக்கம் இணைப்பில்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: