28 டிசம்பர் 2014

சாவு!

உடலிலிருந்து ஒரு நாள் உயிர் வெளியேறிவிடும்..தரித்திரிருந்த சட்டை கந்தலாகிப்போனால் அதனை கழற்றி சுதந்திரமடையும்..கூடு ஒரு நாள் தனித்து விடப்படும்.. இது நாள் வரை போற்றி பாதுகாத்தது வெறும் சக்கை என மண்ணில் தள்ளும் நிலை வரத்தான் செய்யும். 

உடல் என்ற கூட்டை பராமரித்து நல்ல செயல்பாட்டில் வைத்திருக்கும் வரை உயிர் தங்கும்.. உடல் பழுதடைந்தால் இயங்கிய உடல் இயங்கா நிலை அடைந்தால் உடல் சாகும். உயிர் போகும்.. எங்கே போகும் வந்த வழி போகும். எது வந்த வழி அதுவென அலசுவதற்கு இப்போது நாம் செல்லவில்லை.(வேறொரு முறை நாம் பார்ப்போம்)

இதயம் பாதித்தால் இரத்த ஓட்டம் ஸ்தம்பித்தால்  செல்களுக்கு செல்லவேண்டிய ஆக்ஸிஜன் நின்று போனால் அதற்குரிய  தீனி  கிடைக்காவிட்டால் உடன் உடலின் இயல்பு இயக்கம் தடைபட சூடு குறைய மனிதன் என்பவன் சடம் ஆவான். சாதாரணமாக ஒரு மின்விசிறி இருக்கிறது மின்சரத்தால் நாம் வேண்டும் போதெல்லாம் அது இயங்கி கொண்டே இருக்கும் அந்த மின் விசிறியின் உள்ளே உள்ள காயிலில் ஏதேனும் கேடடைந்தால் அது ஜ்ஜ்ஜ்ஜ்.. என சத்தம் மட்டும் வரும் ஆனால் இயங்காது.. இயங்க முயலும் ஆனால் இயங்க முடியாது இதே போல் காயில் சரியாக இருந்து உள்ளே உள்ல மற்ற ஏதேனும் சரிவர இல்லாது போனாலும் ஏதேனும் வயரில் பிரிவோ..பிளவோ ஏற்பட்டாலும் கூட விசிறி சுற்றாது எத்தனை முறை நாம் பொத்தானை அழுத்தினாலும் சுற்றாது நிற்கும் மின்சாரம் முன்பு இருந்ததை போலவே இருந்தாலும்.. அதை கொண்டு செயல் படாத நிலைக்கு சென்று விட்டது மின் விசிறி அதாவது விசிறி செத்துவிட்டது அதை கழற்றிவிட்டு மற்றொன்று மாட்டப்படவேண்டும் என்பது தான் நாம் அறிந்தது இது போலவே தான் உயிர் இருக்கும் உடல் நல்ல இயக்கத்திலிருந்து கெட்டு போய்விட்டால் உயிரால் ஏதும் ஆகாது உயிரால் கேடடந்தை உடலை இயக்கமுடியாத நிலையில்  விசிறி செயலற்ற நிலைக்கு வந்தது போல தான் கொஞ்சம் கொஞ்சமாக உடலும் செயலற்ற நிலைக்கு வந்துவிடும். மின்சாரம் இருக்கும் ஆனால் விசிறி தான் ஓடாது அதைப்போல் உயிர் போகும் உடல் சாகும். 


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: