10 ஆகஸ்ட் 2020

இறைவா என்னை காப்பாற்று..!

பல்லவி: 
இறைவா என்னை காப்பாற்று -இந்த 
இருளில் இருந்து கடைத்தேற்று

 அனுபல்லவி: 
வழிந்திடும் கண்ணீர் துளிதுடைத்து
முறையிடும் மனதை நீ தேற்று.

சரணம்: 1 
அருளாய் கொஞ்சம் பார்த்திடடா - என் 
அழுகையை நீயும் தீர்த்திடடா
பொருளால் சூழ்ந்த பெருஞ்சோகம்
எனை புரட்டி எடுத்து வதைக்குதடா

நான்கு திக்கிலும் துயர் வெள்ளம்
தாங்கிடமுடியா பெருந் தவிப்பு
ஓங்கிடும் உன்கரம் என்றே தான்
இக்கணம் வரையென் உயிர்துடிப்பு
** 
 சரணம்: 2 
அருமை பெருமை சிந்தனைகள்
ஆயிரந்தான் என்ன லாபமடா
சிறுமை காசு இல்லையென்றால்
எந்த திறமையும் உலகில் சாபமடா

வறுமை எனும் பெரும் நோயதிலே
யாரும் வீழ்திடவேனும் கூடாதடா
பொறுமை இழந்திடும் நெஞ்சிற்கு
மருந்திடும் உன் கை வேண்டுமடா
**
 சரணம்: 3 
கவலை நெஞ்சத்தில் விளக்கேற்றி
நிம்மதி வெளிச்சம் நீ காட்டு
குறையாய் நானும் வாழ்ந்துவிட்டால்
பிழையாய் ஆகுமே என் பாட்டு

நிலமதில் நிலமையை  நீ மாற்றி 
வளமான வாழ்வால் மகிழ்வூட்டு  
திரையை கலைந்து நீ பார்த்து
எனக்கு திரவியங்களால் அணிகூட்டு.


 ஜா.முஹையத்தீன் பாட்ஷா
26-06-2020



கருத்துகள் இல்லை: