02 ஜூன் 2021

முஸ்லிம் லீக் தலைமைக்கு கண்டனங்கள்


முஸ்லிம் லீக் தலைமை நிர்வாகிகள் அதற்கு முடிவுரை எழுதும் செயலில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் இணையத்தில் கூடி கடந்த காலத்தில் கட்சி, மாநில தலைமை செய்துள்ள தவறுகள், அடக்குமுறை, துரோகம் மற்றும் மாவட்டம் செய்ய மறந்தவைகள், இப்போதுள்ள களநிலவரம் வருங்காலத்தில் ஆற்றவேண்டிய செயல்பாடுகள் என பல கருப்பொருட்களில் பலரின் கருத்துக்களை கேட்டறிந்து அதில் பலரும் பலவித கருத்துக்களை மிக கடுமையாக சொன்ன போதிலும் அதனை சீர்திருத்தி நாகரீகமான முறையில் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டு சுயபரிசோதனைக்கும் வருங்கால கட்சி வளர்ச்சிக்குமான உரிய தீர்மானங்களை அனுப்பி வைத்த போது அதை ஏற்க மறுத்து அவர்களை நோக்கி வரும் கேள்விக்கணைகள் என்பதால் அது பதியப்படக்கூடாது என மணிச்சுடரில் அதை விலக்கிவிட்டு மாவட்ட முஸ்லிம் லீக்கினரின் எண்ணங்களை கருத்துக்களை இருட்டடிப்பு செய்யும் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் செயல்பாடுகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வன்மையான கண்டனங்கள்.
நான் கடந்த பத்து ஆண்டுகளாக கவனிக்கும் அடக்குமுறை சர்வாதிகார போக்கு நீடித்தால் கட்சியில் இருக்கும் சிலரும் சடைவடைந்துவிடுவர். தங்களின் பதவியை தக்கவைக்க கட்சியை சீரழிக்கும் செயலால் வரலாறு மோசமான பக்கங்களை எழுதிக்கொண்டுள்ளது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
1-06-21