28 டிசம்பர் 2014

மூலமாகும் மூடபக்தி

பக்தி தான் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்... ஒருவன் அறிவாளியாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் பக்தியால் தான் வழி நடத்தப்படுகிறான். பக்தி பெரும்பாலும் அறிவாளி, பாமரன் என்று வேறுபாடு இல்லாமல் மூடத்தனமாகவே உள்ளது.
பக்தி, சிந்தனையை அப்படியே உறைய வைத்திடும் இதனால் அறிவுக்கண் அவ்வளவு எளிதில் திறந்திடாது ஆனாலும் பக்தனின் இந்த பக்தியை அதனால் வரும் சரணாகதியைப் பயன்படுத்தித் தான் மிகப்பெரும் அறிவுஜிவிகள் மனிதன் மனிதனை துன்புறுத்தாமல் இருக்கவும், அவனால் அவனுக்கே கேடு நிகழாதிருக்கவும் சமூகசீர்திருத்தங்களுக்காக, தனிமனித ஒழுங்குக்காக பயன்படுத்தினர்.
உண்மையில் ஓருவன் முற்றும் ஆய்ந்து அறிந்து தெளிந்தால் போலி பக்தி ஆட்டம் காணும் அதற்கு அப்பாலும் ஒரு பக்தி வருகிறதென்றால் அது பரவாயில்லை, அதை உண்மையான பக்தி வைத்துக்கொள்ளலாம். அந்த மெய் பக்தியால் உலகிற்கு நலமே ஒழிய தீங்கு இருக்காது அவன் மனிதத்தன்மையுடன் மனதநேயத்துடன் நடக்க முயல்வான். ஆனால் வெறும் குருட்டு பக்தியாலோ... எவ்வளவுக்கெவ்வளவு நல்லது நடக்குமோ அல்லது நல்லதிற்கு பயன்படுத்தலாமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா தீங்குகளும் நடக்கும், தீங்குகளுக்கும் பயன்படுத்தலாம். இன்று இதில் இரண்டாம் வகை தான் நடந்து கொண்டிருக்கிறது, அந்த மூட பக்தியை அல்லது மூடபக்தனை பயன்படுத்தித்தான் எல்லா ஈனங்களும் அரங்கேற்றபட்டுக் கொண்டிருக்கிறன.
முழுமையாய் அறிவு விழித்துக்கொள்ளும் போது பக்தி துரத்தப்படுகிறது. ஆனாலும் மற்ற பொது மனிதர்களின் எல்லா படிநிலை அறிவம்சம் கருதி மெளனமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் பக்தி எனும் சங்கிலி தான் அவர்களை கட்ட வசதியானது என்பதால்.
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: