20 டிசம்பர் 2014

அஹமது நளீருக்கு ஆறாம் அகவை



இன்றைக்கு டிசம்பர் 20 என்பதே நினைவில் இல்லை, 


அதற்கு இன்னும் எத்தனையோ நாட்கள் இருப்பதாகவே எண்ணம். திடீரென வாட்ஸ்அப்-ல் பர்த்டே கேக் வருகிறது, ஆஹா! இன்று என்ன தேதி.. மறந்தே விட்டதே என நாக்கை கடிக்கையில் போன் வருகிறது.............அதில் என் செல்ல மகன் அஹமத் நளீர் பேசுகிறான்.

"ஹலோ.. இன்னைக்கு எனக்கு ஹாப்பி பர்த்டேன்னு தெரியுமா.. ஏ நீங்க விஸ் பண்ணல"ன்னு.. 

"செல்லக்குட்டி..ராஜா.. நீ நல்லா சிறப்பா எல்லா நலமும் வளமும் பெற்று சூப்பரா இருப்படா..கண்ணே..ஆமா, புது டிரஸ் போட்டிருக்கியா" அப்டின்னேன்..

அதுக்கு" இல்ல பாப்பு..சாய்ந்தரம் தான் எல்லாரும் வருவாங்க அப்பத்தான் உடுத்திக்கிவேன்" ன்னான் என் செல்ல மகன்.

இன்று என் டிசம்பர் பூக்கள் இரண்டில் மகனுக்கு பிறந்தநாள்.

ஆறாம் அகவை காணுகிறான். மகனை வாழ்த்துவதில் தான் எத்தனை மகிழ்ச்சி. "இறைவா உன் நேசமிகு நபிகள் நாயகத்தின் பொருட்டால். நீ எல்லா நலவளங்களும் என் பிள்ளைக்கருள்".

Wishing you many more happy returns of the day my son Ahamed Naleer

Birthday wishes for Naleer in Face Book Page 20thDec2014 Just Click.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: