16 டிசம்பர் 2014

27-ஆம் கிழமை புனித லைலத்துல் கத்ர் இரவு (ஜுலை24,2014)

(கடந்த ரமாலானில் ஜூலை மாதம் 24,2014 நடந்த நிகழ்வு ஒரு பதிவிற்காக)

அமீரகத்தில் நேற்று ரமலானின் 27-ஆம் கிழமை புனித லைலத்துல் கத்ர் இரவு (இறையருள் வார்க்கும் மகத்தான இரவு) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேரா துபையின் கோட்டைப் பள்ளியில் இஸ்லாமிய தமிழுலகம் அறிந்த மார்க்க அறிஞர் பெங்களூர் ரஷாதியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் அல்ஹாஜ் மவ்லவி சைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிச்சத்தில் அழகுற எடுத்தியம்பினார்கள்.
உரையில் இன்றைய தினங்களில் கத்ருடைய இரவு குறித்து பற்பல சந்தேங்களை எழுப்பி சமுதாயத்தை சிலர் குழப்பி வரும் நிலையை சுட்டிக்காட்டி இது அந்நாளை இச்சமூகம் பெற்று பயனெய்திடக்கூடாது என்பதின் உள்நோக்கமுடையோர் செய்யும் குதர்க்க வேலை என்றும் கத்ருடைய இரவு என்பது 27ம் கிழமை தான் என்பதற்கு புகாரி சரீபின் நபிமொழிகளையும், சஹாபாக்களது வாழ்வியல் சம்பவங்களையும் குறிப்பாக ஹஜ்ரத் உமர் (ரலி), இமாம் ஹசன் (ரலி), ஹஜ்ரத் பிலால் (ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஹஜ்ரத் உதைபதுல் எமான் (ரலி), உபை இப்னு கஃப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) போன்றவர்களின் அறிவிப்பாக ஆதாரங்கள் இருப்பதையும் தெளிவாக அடுக்கடுக்காய் சொல்லிக்காட்டி இன்றைய இரவை பயன்படுத்தி செம்மை பெறுங்கள்.. எல்லோரும் வெறுப்புணர்வு இல்லாமல் அன்பு பாராட்டி குறிப்பாக தாய், தந்தையரின் அன்பை பெற்று, இல்லாதவருக்கு உதவி மனநிறைவை பெற்று இன்றைய இரவில் மனத்தூய்மையோடும், பயபக்தியோடும் நல்லறம் செய்தால் இறைவன் வாக்களித்த சிறப்பை தருவான். நீங்கள் என்னென்ன வேண்டுகிறீர்களோ அவைகளை உங்களுக்கு நன்மையாய் இருக்கும் பட்சத்தில் எவ்வகையிலேனும் அதை அருளி சிறப்பாக்குவான் என்ற மூலக்கருத்துடன் பயான் செய்தார். இதில் தாய் தந்தையரை கவனித்து அவர்களின் வாழ்த்தை பெறுவதன் அவசியத்தினை மிக அற்புதமாக நபிகளார் கூறிய ஹதீஸின் சம்பவங்களை மேற்கோள்காட்டி பேசினார்கள்.
பிறகு தஸ்ஃபீஹ் நபீல், திக்ரு மஜ்லிஸ், தவ்பா நிகழ்வு மற்றும் கியாமுல் லைல் என்னும் இரவுத் தொழுகை எல்லாம் சிற்ப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் என எல்லாவற்றிலும் மக்கள் நிரம்பி அதுவும் போதாமல் கூட்டம் மிகைத்திருந்தது.. பள்ளிக்கு உள்ளேயே சற்றேரகுறைய 5000க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்ககூடும்.
சிறப்பான இரவை இறைவனின் பொருந்தம் தரும் நல்லமல்கள் செய்து மக்கள் நிறைவாக்கிவைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: