28 செப்டம்பர் 2021

பிரபல கவிஞன்

சொல்வளம் கொண்டவன்
தமிழ் மணம் நுகர்ந்தவன்
மொழியின்பம் அடைந்தவன்
வாட்டிய வறுமையை
ஓட்ட அறியாதவன்
மதுவைக் கைகொண்டு
மகிழ்ச்சி மனக்கோட்டை கட்டினான்
புவிமறக்க குடித்து விட்டு
கவிச்சொற்களைக் கொட்டினான்
அவன் மயக்க விரும்பி;
மயக்கம் அவனை மயக்கித் தனதாக்கியது
தீரும் மயக்கத்தில் மூழ்குபவனை
தீரா மயக்கம் தீரத் தீர்த்தது.
மதுவைக் குடித்து
போதையெனும் சொற்பமரணத்தை
வேண்டித் தழுவியவனை;
மரணமெனும் மது குடித்துவிட்டது
தீராத போதையில் தீர்ந்து போனான்
ஜா.மு
1:41பிற்பகல்
17-09-2021


கருத்துகள் இல்லை: