08 மார்ச் 2016

கொண்டாடுவோம் தாய்மையை!


காலம் பூராவும் கடன்பட்டு
பணிவுடன் கனிவுகூட்டி
பாசத்துடன் பணிவிடைதனை
வாழும் நாளெல்லாம்
வாழ்த்தி நிதம்செய்தாலும்,

தாயே... தாரகையே..
தாரணியில் என்னொளியே என்றாலும்

உனைச்சுமந்த கர்ப்பக்காலத்தில்
உதைத்தாயே உன் தாயை
நீ உதைத்த அந்த ஓர் உதைக்கு
இவையெல்லாம் ஈடாகாதே,

ஆதலால் மானிடர்கால்
தாயை போற்றுவீர்
எங்கெங்கோ சுவனம் தேடி
எதற்கும் அலையாதீர்,

உன் தாயின் காலடியில்
உனக்கான உயர் சுவர்க்கம் - அவள்
உள்ளம் குளிரவைத்து
உயர்வுடன் நீயும் அடைந்துகொள்
என்றார்கள் ஆறாம் வயதில்
அருந்தாயை இழந்தே
அன்பு தேடி வாடிய
அண்ணல் முகம்மது நபியவர்கள்!

கொண்டாடுவீர் அன்புடையீர்
பெண்மையின் உன்னதத்தை.

-வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: