20 மார்ச் 2016

குழப்பத்தில்!

ஒருவர் டீ நல்லதென்கிறார்.
இல்லை இல்லை..
காபி மூளை சுறுசுறுப்பாகும்
அதனால் அதைக்குடி என்கிறார் பிரிதொருவர்.
பழஞ்சோற்று கஞ்சிக்குடி
பலம் பெருகுமென்கிறார் எனக்கொருவர்.
மல்லிக்கசாயம்
மகிமை வாய்ந்ததென்கிறார்
மருத்துவரொருவர்.
தண்ணிர் போல் ஒரு
தகைசால் பொருளில்லை
அதுவே குடிக்கச்சிறந்ததென்கிறார்
தெரிந்தவருவர்.
"எந்தெ கஸ்மாயமும் பியிக்காது
காலைல எந்திருச்சாக்க நமக்குல்லாம்
டாஸ்மாக் தான்"
என்கிறார் அவரொருவர்.
இதில் எது சிறந்ததென குழப்பம் தீராது...
ஓட்டுப்போடப்போகும்
தமிழ் வாக்காளனாய் 
தவிக்கிறான் இவன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: