27 ஜூன் 2014

முகநூல்!

எத்தனை சிந்தனை
எத்தனை கோணம்

எத்தனை நிந்தனை
எத்தனை கோணல்

எத்தனை போதனை
எத்தனை காணல்

எத்தனை உந்துதல்
எத்தனை சிந்துகள்

எத்தனை முத்துக்கள்
எத்தனை சிப்பிகள்

எத்தனை குப்பைகள்
எத்தனை கோபுரம்

எத்தனை அறிவுகள்
எத்தனை புரிதல்கள்

எத்தனை செய்திகள்
எத்தனை நெய்தல்கள்

எத்தனை நட்புகள்
எத்தனை வியப்புக்கள்

முகநூல் ஒரு போதி!! - அதன்
குருகுலத்தில் உலகின் பாதி!!!

முகநூல் ஒரு வியாதி!!! -
அது இல்லை எனில் பலருக்கு ஆகிவிடும் பேதி!!! பேதி!!! பேதி!!!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: