09 பிப்ரவரி 2023

அறியாதபுரம் : நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் - முஹம்மது பிர்தெளஸ்

J Mohaideen Batcha கவிதைத் தொகுப்பு வாழ்வின் பல பரிமாணங்களை காண்பிக்கிறது. குழந்தை, பருவ வயது, காதல் வயப்பட்ட பையன், வாழ்க்கையைப் பற்றி குழம்பும் 30+ வயது உடைய மனிதன், முதிர்ச்சி பெற்ற பக்குவப்பட்ட மனிதன், ஜென், சூஃபிசம் என பல வாழ்வையும் இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.
சமகாலத்துக்கேற்றவாறு பின்நவீனத்துவ கவிதைகளையும் அள்ளி தெளித்திருக்கிறார். எ.க: "கொடும் லாவா மனதில் இருக்க பெரும் லாவகம் காட்டாதே; நைட்ரஜன் குண்டுகள் எறிந்து கொண்டே நைசாகப் பேசி மெழுகாதே"
இங்கு யாருக்குமே வாழவே தெரியல என்கிற மாதிரி சில கவிதைகள்,"எல்லோரும் அதிகம் வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனாலும், வாழ்தல் என்பது தான் பெரும்பாலும் நிகழ்வதே இல்லை."
நிலாவை பெண்ணோடு மட்டும்தான் ஒப்பிட முடியுமா, விரல் நகத்தோடும் ஒப்பிடலாம் என்பதை அவர் கவிதை வரிகள் காட்டுகிறது, "குட்டி குட்டி நிலவாகத் தோன்றினாலும், வெட்டித்தான் எறிய வேண்டும் விரல் நகத்தை!"
தன் தாய் மொழியை நேசிக்கிறவனால் மட்டுமே கவிதையையும் நேசிக்க முடியும். ஏனென்றால், அந்த மொழிதான் கவிதைக்கு அழகையும் ஆற்றலையும் தருகிறது. அந்த வகையில் இப்படி ஒரு கவிதை, "அவசரத்தில் அழைக்கும் போது அந்நிய மொழி கை கொடுக்காது. அன்னை மொழிதான் அனிச்சியாய் வரும்!"
(நல்ல கவிஞனைவிட மோசமான கவிஞன் தன் வாழ்நாளில் ஈட்டிக்கொள்ளும் வெற்றிகள் அதிகமாக இருப்பதால் அவனை மோசமான கவிஞன் என்று நிரூபிப்பது கடினமாகவே இருக்கும். ஏனெனில் அவன் தொடர்ந்து சபையோரின் கரகோஷங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறான்.
புகழ்பெற்ற மோசமான கவிஞனை மோசமான கவிஞன் என்று நாம் கூறும்போது அவன் நம்மீது அவனுடைய புகழை விட்டெறிவான். புகழ், கவிதையின் குணத்தைத் தீர்மானிக்காது என்று நாம் சொல்ல முற்பட்டால் அவன் அவனுடைய புத்தகங்களை விட்டெறியத் தொடங்குவான். அவை எண்ணிக்கையில் மிக அதிகமானவை. அத்துடன் தடிமன் ஆனவையும்கூட.
- ந பிச்சமூர்த்தி)
இந்த நல்ல கவிஞனுக்கும் கேலக்ஸி பதிப்பகத்துக்கும் என்
வாழ்த்துகள்
.
நன்றி Balaji Baskaran





1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் சிறப்பு.
நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கில்லர்ஜி தேவகோட்டை